New Update
/indian-express-tamil/media/media_files/2qpz5kltNmT5jWbeesrR.jpg)
கோயம்புத்தூர் மேற்குதொடர்ச்சி மலையில் நிலச்சரிவு
கோவை, பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் மேற்குதொடர்ச்சி மலையில் நிலச்சரிவு
கோவை நரசீபுரம் ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை, பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதில் வன விலங்குகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றாக இருக்கும் நரசீபுரம் ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு காணப்பட்டது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் உடனடியாக விரைந்து சென்ற வனத் துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த மண் சரிவினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை, வன விலங்குகளுக்கு ஏதாவது பாதிப்பு பட்டு உள்ளதா? என்பது குறித்து தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதி பொதுமக்கள் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்தும் உள்ளனர். அந்த வனப்பதிக்குள் சென்று உள்ள வனத்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு மீண்டும் வந்து அடிவாரப் பகுதியில் ஆய்வு முடிவுகளை தெரிவித்தால் மட்டுமே வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றதா..? என்று தெரியவரும் இதனால் வனத் துறையினரின் தகவலுக்காக காத்திருக்கும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வன ஆர்வலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.