Tamilnadu News Update : திருச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரோந்து இரவு நேர ரோந்து பணிக்கு சென்ற சிறப்பு காவல் துணை ஆய்வாளர் பூமிநாதன் என்பவர் ஆடு திருடர்களை விரட்டி செல்லும் போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் என்ற இளைஞருடன் 2 சிறுவாகள் கைது செய்யப்ட்டுள்ளனர்.
இந்நிலையில்’, தமிழகம் முழுவதும் இனிமேல் ரோந்து பணிக்கு செல்லும் காவல்துறையினர் கையில் துப்பாக்கி எடுத்துச்செல்லுமாறு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாவு உத்தரவிட்டு்ளளார். இது குறித்து ஓய்வுபெற்ற டி.ஜி.பி., ஜாங்கிட் கூறுகையில்,
காவலர்கள் ரோந்து, வாரன்ட் கொடுக்க செல்லுதல், கோஷ்டி தகராறை தடுக்க செல்லும்போதும் குறைந்தது 2 காவலர்கள் செல்ல வேண்டும். ஆனால் சில காவல் நிலையங்களில் ஆள் பற்றாக்குறையால் ஒருவர் மட்டுமே ரேந்து பணிக்கு செல்லும் நிலைமை உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் ரோந்து பணிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் இருவர் நேர்ந்து ரோந்து பணிக்கு செல்லும்போது அதில் ஒருவரிடம் கட்டாயம் துப்பாக்கி இருக்க வேண்டும்
மேலும் காவலர்கள் துப்பாக்கி எடுத்துச்செல்ல அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். துப்பாக்கி எடுத்துச்செல்லும் அதிகாரிகள் அதனை முறையாக விதிமுறைப்படி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும். தற்காப்பு விதிகள் குறித்து காவலர்களுக்கு சொல்லித்தர வேண்டும். காவலர்களில் ஒருவர் இறந்தால், மற்ற காவலர்களுக்கு பயம் வரும் இது குற்றவாளிகளுக்கு சாதகமாக மாறிவிடும். எனவே காவலர்கள் துப்பாக்கி பயன்படுத்துவதில் தவறில்லை.
என்து 35 ஆண்டுகால அனுபவத்தில் எங்கு சென்றாலும் துப்பாக்கியுடன் தான் செல்வேன். பலமுறை எதிரிகளிடம் இருந்து நானும் சக போலீசாரும் தப்பித்துள்ளோம். 1988-ல் நெல்லை ஆலங்குளம் பகுதியில் தனி ஆளாக ரேந்து பணிக்கு சென்றபோது, பாப்பாகுடி பகுதியில் காட்டிற்குள் சைக்கிளில் சென்ற ஒருவரை பிடித்து விசாரிக்கும்போது அவர் கத்தியால் குத்த முயன்றார். அப்போது எனது கையில் துப்பாக்கி இருந்ததால், அதனை பயன்படுத்தி அவரை பிடித்தேன்.
அதேபோல் 1997-ல் நெல்லையில் பணியாற்றியபோது, கங்கைகொண்டான் பகுதியில் மறியல் நடந்ததால், ஒரு கிராமத்தில் வழியாக நடந்து சென்றோம். அப்போது சிலர் எங்களை சுற்றி வளைத்தனது. அதில் எங்களின் துப்பாக்கி வண்டியில் இருந்தது. அப்போது சுப்பிரமணியன் என்ற காவலர் வைத்திருந்த துப்பாக்கியை பயன்படுத்தி தப்பித்தோம் இதில் 3 பேர் மரணமடைந்தனர். இதற்காக விசாரணையை சந்தித்தோம்.
1999-2000-ம் மதுரையில் பணியில் இருந்தபோது ரோந்து பணிக்கு செல்லும் காவலர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டனர். இதனால் ரோந்து பணிக்கு செல்லும் காவலர்கள் இனி துப்பாக்கி இல்லாமல் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டேன். அதன்பிறகு தாக்குதல் சம்பவம் நடக்க வில்லை.
தமிழக கர்நாடக எல்லையில் ரவுடி வெள்ளை ரவியை பிடிக்க சென்றபோது தூப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் நான் 6 ரவுண்ட்ஸ் சுட்டத்தில் வெள்ளை ரவி உட்பட 2 பேர் மரணமடைந்தனர். இதற்காக என்பெயரில் ஓசூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 2006-ல், வடக்கு மண்டல டிஜிபியாக இருந்தபோது, உ.பி பவேரியா கொள்ளையர்கள் இருவரை என்கவுண்டர் செய்தூம். அப்போது அவர்களிடம் துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் இருந்தது. ஆனால் எங்களிடம் துப்பாக்கி இல்லை.
அப்போது உ.பியில் இருந்து தமிழகத்தில் கொள்ளையாடிக்க காரணம் என்ன என்று கேட்டபோது, ராஜஸ்தான், உ.பி., ம.பி. உள்ளிட்ட மாநிலங்களில் கொள்ளையடித்தோம். இதில் உ.பி போலீசார் ரோந்து பணிக்கு துப்பாக்கியுடன் செல்வதால், எங்களை என்கவுண்டர் செய்ய வாய்ப்புள்ளது. அதனால் தான் தமழகத்திற்கு வந்தோம். இங்கு போலீசார் ரொந்து பணிக்கு துப்பாக்கி எடுத்து செல்வதில்லை. அப்படியே அவர்கள் எங்களை விரட்டி பிடிக்க வந்தாலும் நாங்கள் அவர்களை சுட்டுவிடுவோம் என்று கூறியதாகவும், இதனால் ரோந்து பணிக்கு செல்லும் காவலர்கள் துப்பாக்கியுடன் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டதாக கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.