மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் உடலுக்கு திமுக சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கனிமொழி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்
கோவை சாய்பாபா காலனி சேர்ந்தவர் கோவை தங்கம். கடந்த 1949-ம் ஆண்டு பிறந்த இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளார். 1969-ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் இணைந்த இவர், அதன் பின்னர் மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் மாநில காங்கிரஸ் துணைத் தலைவராகவும், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் என பல பதவிகளை ஏற்று அந்த கட்சியில் பணியாற்றி வந்தார்
தொடர்ந்து கடந்த 2001 2011 வரை வால்பாறை தொகுதியில் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். 2019"ல் இருந்து 2021 பிப்ரவரி வரை தமிழ் மாநில காங்கிரஸில் இருந்த கோவை தங்கம் அதே ஆண்டு மார்ச் மாதம் திமுகவில் இணைந்தார். 1965 ஆம் ஆண்டு மொழிப்போர் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர் கோவை தங்கம்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல்நல பிரச்சினை காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிகாக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. திமுக தொண்டர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்
இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு கோவை தங்கம் உடலுக்கு திமுக சார்பில் திமுக துனைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கோவை தங்கம் வீட்டிற்கு சென்று அங்கு அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil