Advertisment

கொள்கை முடிவால் தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது: தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலை கொள்கை முடிவு எடுத்த பின்னர்தான் மூடப்பட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொள்கை முடிவால் தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது: தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலை கொள்கை முடிவு எடுத்த பின்னர்தான் மூடப்பட்டது என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதனைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசார் தடியடி நடத்தினர். அப்போது சில மர்ம நபர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்த மே மாதம் 28ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பின்னர் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார்.

Advertisment

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை தெளிவற்று இருப்பதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு அதிருப்தி தெரிவித்தனர். தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெளிவு இல்லை, எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தது.

இந்நிலையில், வைகோ தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் அளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உயர்மட்ட அதிகாரிகளிடையே கொள்கை முடிவு எடுத்த பின்னரே அதனை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் தொடர்பான அனைத்து வழக்கு விசாரணைகளையும் ஜூலை 11ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

Vaiko
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment