பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஜனவரி 17-ஆம் தேதியும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை நடப்பு ஆண்டில் வரும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி 15-ஆம் தேதி மாட்டுப் பொங்கலும், ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுகிறது.
இதற்காக குறிப்பிட்ட மூன்று நாட்களும் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையின் வழக்கமான விடுமுறை இருந்தது.
இந்நிலையில், ஜனவரி 17-ஆம் தேதியும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பொங்கல் கொண்டாட்டங்களுக்கு ஏதுவாக 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.