Advertisment

இந்தச் சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுங்கள்.. மத்திய அரசிடம் பட்டியலை வழங்கிய தி.மு.க.

தற்போதைய நிதியாண்டின் இறுதி வரை காத்திருக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
express photo

highway

500 கி.மீ., நீளமுள்ள எட்டு மாநில சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.

Advertisment

publive-image

தற்போதைய நிதியாண்டின் இறுதி வரை காத்திருக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அமைச்சகம் முன்மொழிவுக்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்திருந்ததால், 2016-ஆம் ஆண்டு முதல் அந்த பகுதிகளின் பராமரிப்புப் பணிகளை மட்டும் மேற்கொண்டனர், சாலை மேம்பாட்டுப் பணிகள் எதையும் மாநில அரசு மேற்கொள்ளவில்லை.

மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இ.வி.வேலு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், தேவையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என, சமீபத்தில் வலியுறுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, கட்காரி ஆகியோரிடமும் இந்த பிரச்னையை எடுத்துரைத்தார். இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மத்திய அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்றால், அடுத்த நிதியாண்டில் முதல்வரின் ஒப்புதலுடன் இந்த சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் போன்ற பணிகளை மாநில அரசு மேற்கொள்ளும்" என்றும் அமைச்சர் கூறினார். மத்திய அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து, மாநில அரசு இந்த திட்டத்தில் செயல்படும்.

திருவண்ணாமலை, திருச்செந்தூர் மற்றும் பழனி போன்ற புனித யாத்திரை மையங்கள் மற்றும் பல வர்த்தக மற்றும் சுற்றுலா மையங்களை இணைக்கும் வகையில், 500 கிமீ நீளமுள்ள நெடுஞ்சாலை தேவைப்படும் என்று கூறப்படுகிறது.

அவை, திருவண்ணாமலை- கள்ளக்குறிச்சி, வள்ளியூர்- திருச்செந்தூர், கொள்ளேகால்- ஹானூர்- பாலார் சாலை- மேட்டூர் வரையிலான டிஎன் எல்லை, மேட்டுப்பாளையம்- பவானி, அவிநாசி- மேட்டுப்பாளையம், பவானி- கரூர், பழனி- தாராபுரம் மற்றும் ஆற்காடு- திண்டிவனம் ஆகிய இடங்களை இணைக்கும் விதத்தில் இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், கொள்கை ரீதியில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள சாலைகளின் பட்டியலில் இருந்து சாலைகளை நீக்க, மத்திய அமைச்சகத்திடம் நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

அடிப்படை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆறு ஆண்டுகளில் சாலைகள் அவற்றின் வடிவமைப்பு ஆயுளைக் கடந்தன. அவை மோசமான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

சென்னை- NH4- சென்னசமுத்திரம் மற்றும் நெமிலி, சென்னை பைபாஸ்- வானகரம் மற்றும் சூரப்பட்டு மற்றும் பரனூர் (NH45) ஆகிய ஐந்து சுங்கச்சாவடிகளின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேலு பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

மக்கள்தொகை அதிகரிப்பால் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் புறநகர் பகுதிகளுக்கு மக்கள் இடம் பெயர்ந்து வரும் நிலையில், இதுபோன்ற இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகள் பொதுமக்களின் விமர்சனத்துக்கு வழிவகுக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Nhai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment