Advertisment

தனியார் மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்கீடு ஆணை ரத்து : தமிழக அரசின் உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வதற்காக தனியாருக்கு மருத்துவமனை கட்ட அரசு சார்பில் 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Madras High Court  questions over Kallakurichi hooch tragedy Tamil News

சென்னை உயர்நீதிமன்றம்

வண்டலூர் அருகே மருத்தவமனை அமைக்க ரூ200 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியார் அறக்கட்டளைக்கு ஒதுக்கியதை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஆரோன் சாமுவேல் மருத்துவமனை சொசைட்டி சார்பில் ஜி.ஆரோசன் தேவதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வதற்காக எங்களது மருத்துவமனை சொசைட்டி சார்பில், வண்டலூர் அருகே, பெருங்களத்தூர் அருகே வேளான்துறைக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம் கடந்த 1969-ம் ஆண்டு ஏக்கர் ரூ300 வீதம் எங்கள் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டது.

அதன்பின்னர் இந்த இந்த நிலத்திற்காக மேலும் ரூ60 ஆயிரம் அரசுக்கு செலுத்தப்பட்டது. ஆனால் உயிரியல் பூங்கா அமைக்க வேண்டும் என்று கூறி உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொண்ட அரசாங்கம், அதற்கு பதிலாக வனத்துறைக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை கடந்த 1975-ம் ஆண்டு எங்களுக்கு ஒதுக்கி அரசானை பிறப்பித்த்து. இந்த 20 ஏக்கர் நிலத்தில் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள வனத்துறையினர், மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர்.

இந்த மரக்கன்றுகளை அகற்றுமாறு வனத்துறையினரிடம் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்த இடத்தில் மருத்துவமனை கட்ட தடையில்லா சான்றும் வனத்துறையினர் வழங்கவில்லை. இதனிடையே இந்த இடத்தில், 5 ஆண்டுகளுக்குள் மருத்துவமனை அமைக்கவில்லை என்று கூறி, எங்களுக்கு வழங்கிய 20 ஏக்கர் நிலத்திற்கான ஒதுக்கீட்டை ரத்து செய்து தமிழக அரசு கடந்த 2009-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது,

அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. வனத்துறை மரக்கன்றுகளை அகற்றாமல் இருந்ததால், தடையில்லா சான்று வழங்காததால் தான் எங்களால் மருத்துவமனை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்த தமிழக அரசின் அரசானையை ரத்து செய்து நிலத்தை மருத்துவமனை அமைப்பதற்காக எங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவமனை அமைப்பதற்காக சங்கம் பெற்ற 20 ஏக்கர் நிலத்தில் இதுவரை எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. அதனால் தான் இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் எந்த விதி மீறலும் இல்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வனத்துறை மரக்கன்றுகளை அகற்றாமல் இருந்ததால், தடையில்லா சான்று வழங்காததால் தான் எங்களால் மருத்துவமனை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே ஒதுக்கீட்டை ரத்து செய்த தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீட்டை தமிழக அரசு ரத்து செய்ததில் எந்த விதி மீறலும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment