அரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி! - தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்

அரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்லலாம்

அரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்லலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி! - தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்

டீசல் விலையை குறைக்க வேண்டும், சுங்க சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீட்டு தொகை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று (ஜூலை 20) முதல் நாடு முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.

Advertisment

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். இதனயடுத்து தமிழகம் முழுவதிலுமிருந்து 4.5 லட்சம் லாரிகள் போராட்டத்தில் பங்கேற்று இருப்பதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

வடமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டு, பருப்பு வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் கொண்டுவருவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும். போராட்டம் நீடிப்பதால், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. லாரிகள் ஓடாததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சென்னை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சந்தைகளுக்கு கொண்டு வரப்படவில்லை. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் நடமாட்டமும் தடைபட்டுள்ளது.

இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கட்டணமின்றி பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் ஏற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசுபோக்குவரத்து கழகம் இன்று தெரிவித்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: