/indian-express-tamil/media/media_files/2025/05/06/jda2vuc4ruiShLP8wA0Z.jpeg)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இன்று அதிகாலை சோகத்தைக் கிளப்பிய விபத்து ஒன்று நிகழ்ந்தது. திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற மற்றொரு அரசு பேருந்தும், காரைக்குடி நோக்கிப் பால் ஏற்றிக்கொண்டு வந்த தனியார் வேனும் சங்கரபதி கோட்டை அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில், பால் வேனில் வந்த மூன்று வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு பேருந்தில் பயணித்த ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட 16 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துச் சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.