நெல்லைக்கு புதிய போலீஸ் கமிஷ்னர்; 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

வேலூர், திருநெல்வேலி, ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.,க்கள் மாற்றம்; தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு

வேலூர், திருநெல்வேலி, ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.,க்கள் மாற்றம்; தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு

author-image
WebDesk
New Update
How fake profiles of IAS IPS officers being used to swindle the unsuspecting Tamil News

தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி., ஆக இருந்த சைலேஷ் குமார் யாதவ், காவலர் வீட்டு வசதி கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., ஆக இருந்த ஆர்.தினகரன், சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தலைமை காவல் படையின் தலைவராக இருந்த செந்தில்குமார், மேற்கு மண்டல ஐ.ஜி., ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment
Advertisements

மேற்குமண்டல ஐ.ஜி. ஆக இருந்த பவானீஸ்வரி, காவல்துறை மேம்பாட்டு பிரிவு ஐ.ஜி., ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை மேம்பாட்டு பிரிவு ஐ.ஜி., ஆக இருந்த ரூபேஷ் குமார் மீனா நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்

மாநில மனித உரிமைகள் ஆணைய ஐ.ஜி., ஆக இருந்த மஹேந்திர குமார் ராதோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைப்பிரிவு ஐ.ஜி., ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக நீதி மற்றும் மனித உரிமைப்பிரிவு ஐ.ஜி., ஆக இருந்த சாமூண்டீஸ்வரி, சட்டம் - ஒழுங்கு ஐ.ஜி., ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக ராதிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த  செந்தில்குமாரி, குற்றப்பிரிவு ஐ.ஜி., ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை காவல் ஆணையராக இருந்த மூர்த்தி, நெல்லை சரக டி.ஐ.ஜி., ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பிரவேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போக்குவரத்து காவல்துறையின் இணை ஆணையர் தேவராணி, வேலூர் சரக டி.ஐ.ஜி., ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர கிழக்கு இணை ஆணையராக சரோஜ்குமார் தாக்கூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவல் நல்வாழ்வு பிரிவின் ஐ.ஜி.,யாக இருந்த நஜ்முல் ஹூடா இருந்த, காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அபிஷேக் தீக்‌ஷித் சென்னை ரயில்வே டி.ஐ.ஜி., ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அபினவ் குமார் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., ஆக இருந்த துரை, காவலர் நல்வாழ்வு பிரிவு டி.ஐ.ஜி., ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ips Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: