Advertisment

கோவை, சேலத்திற்கு புதிய எஸ்.பி.,க்கள்; தமிழகத்தில் 24 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் ஐ.பி.எஸ் உள்பட 24 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்; 14 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.,க்கள் நியமனம்

author-image
WebDesk
New Update
How fake profiles of IAS IPS officers being used to swindle the unsuspecting Tamil News

தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 24 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 14 மாவட்டங்களின் எஸ்.பி.,க்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisment

இதுதொடர்பாக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள உத்தரவின்படி,

உயர்நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கும் பிரிவில் பணியாற்றிய சக்தி கணேசன், சென்னை பெருநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை தெற்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி,யாக இருந்த சுஜித்குமார் ஐ.பி.எஸ், சென்னை பெருநகர பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல் அகாடமி துணை இயக்குனராக இருந்த செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ், திருவல்லிக்கேணி துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை க்ரைம் பிராஞ்ச் துணை ஆணையராக இருந்த நிஷா ஐ.பி.எஸ், நீலகிரி எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் கடலோர காவல் படை எஸ்.பி.,யாக இருந்த ஹரி கிரண் பிரசாத் ஐ.பி.எஸ் மயிலாப்பூர் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் எஸ்.பி.யாக இருந்த ஆல்பர்ட் ஜான் ஐ.பி.எஸ் தூத்துக்குடி எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை எஸ்.பி.யாக இருந்த கார்த்திகேயன் ஐ.பி.எஸ் கோவை எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி கிழக்கு துணை ஆணையராக இருந்த ஆதர்ஷ் பெசேரா ஐ.பி.எஸ் பெரம்பலூர் எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். 

சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாக இருந்த புக்யா ஸ்னேகா பிரியா ஐ.பி.எஸ், அண்ணா நகர் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பூக்கடை துணை ஆணையராக இருந்த ஷ்ரேயா குப்தா ஐ.பி.எஸ் திருப்பத்தூர் எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். 

தாம்பரம் பள்ளிக்கரணை துணை ஆணையராக இருந்த கவுதம் கோயல் ஐ.பி.எஸ், சேலம் எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் எஸ்.பி.யாக இருந்த அருண் கபிலன் ஐ.பி.எஸ், நாகப்பட்டினம் எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

விருதுநகர் எஸ்.பி.யாக இருந்த பெரோஸ் கான் அப்துல்லா, கரூர் எஸ்.பி.,யாக மாற்றப்பட்டுள்ளார்.

நீலகிரி எஸ்.பி.,யாக இருந்த சுந்தரவடிவேல், சென்னை பூக்கடை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஏ.ஐ.ஜி ஆக இருந்த கண்ணன் விருதுநகர் எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

தாம்பரம் க்ரைம் பிராஞ்சு துணை ஆணையராக இருந்த சுப்புலட்சுமி, கோயம்பேடு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை க்ரைம் பிராஞ்சு துணை ஆணையராக இருந்த ஸ்டாலின் மயிலாடுதுறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் எஸ்.பி.,யாக இருந்த பிரபாகர், திருவண்ணாமலை எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக இருந்த மகேஷ்வரன் தருமபுரி எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

அண்ணா நகர் துணை ஆணையராக இருந்த ஸ்ரீனிவாசன் தென்காசி எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் நகர துணை ஆணையராக இருந்த மதிவாணன் வேலூர் எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

ஆவின் கண்காணிப்பு பிரிவு எஸ்.பி.,யாக இருந்த மெகலினா ஐடன், சென்னை தலைமையிடத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சைபர் க்ரைம் பிரிவு துணை ஆணையராக இருந்த கீதாஞ்சலி, சென்னை க்ரைம் பிராஞ்சு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கண்ட்ரோல் ரூம் துணை ஆணையர் ரமேஷ் பிரபு, சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment