கனமழை எதிரொலி: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர்,காஞ்சி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சென்னை, திருவள்ளூர்,காஞ்சி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

author-image
WebDesk
New Update
rain

புதுச்சேரியில் ரெட் அலர்ட் வானிலை அறிவித்துள்ளது அடுத்து புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்துள்ளார் உள்துறை மற்றும்  கல்வித்துறை அமைச்சர்  அறிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை வானிலை ஆய்வு மையம்  தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள் ளது. புதுச்சேரி கடலூர் விழுப்புரம் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர்,காஞ்சி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு  உள்ளது. தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வருகிற 23 ந்தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மழை அதிகமாகும் வாய்ப்பு உள் ளதால், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளின் அடிப்படையில் பாதுகாப்போடு இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அரியலூர், தஞ்சை, நாகை, காரைக்கால் மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே மாணவ மாணவிகளின் நலன் கருதி நாளை அனைத்து தனியார் பள்ளி அரசு பள்ளி தனியார் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

பாபு ராஜேந்திரன்  புதுச்சேரி

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: