டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் இரண்டு விருந்தினர் மாளிகைகளுக்கு மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி சாணக்யாபுரி, கௌடியா மார்க் பகுதியில் எண் 6-ல் செயல்பட்டு வரும் தமிழ்நாடு இல்லத்திற்கு வைகை இல்லம் எனவும், மற்றொன்று சாணக்யாபுரி பீர் திக்ரன்ஜித் மார்க் பகுதியில் எண் 9-ல் செயல்பட்டு வரும் தமிழ்நாடு இல்லத்திற்கு பொதிகை இல்லம் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதன்மை உள்ளுறை ஆணையரின் கருத்துரையை கவனமாக பரிசீலித்து பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெயர் மாற்றம் செய்ததற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ;வைகை தமிழ்நாடு இல்லம்’, ‘பொதிகை தமிழ்நாடு இல்லம்’ என அரசாணையில் திருத்தம் செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ளது.