/tamil-ie/media/media_files/uploads/2023/02/thai-f.jpg)
தமிழக தலைமை தகவல் ஆணையராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 3ம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு காவல் ஆணையர்களின் பதவியிடங்கள் கடந்த சில மாதங்களாக காலியாக உள்ளது. இந்தப் பதிவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலுடன் அடங்கிய விரிவான அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் குழு முதல்வர் ஸ்டாலினுக்கு சமர்பித்துள்ளது.
இந்நிலையில், தகவல் ஆணையர்கள் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தலைமையில் தேர்வு செய்யப்படும் இந்த பெயர்கள் அடங்கிய பட்டியல், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்படும். அவருடைய ஒப்புதலுக்கு பிறகு , பதவி நியமனம் குறித்த உத்தரவு தமிழக அரசு இதழில் வெளிடப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.