Advertisment

நடுங்க வைத்த கள்ளக்குறிச்சி சம்பவம் : திறமையற்ற அரசாங்கத்தால் உயிர்பலி ; இ.பி.எஸ் ஆவேசம்

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 28, சேலம் 15, விழுப்புரம் 4, பாண்டிச்சேரியில் 3 பேர் என மொத்தம் 50 பேர் பலியாகியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Edappadi palanisamy

எடப்பாடி பழனிச்சாமி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிழைலயில், இந்த சம்பவத்தற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Advertisment

கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியான கருணாபுரம் பகுதியில் விஷ சாரயம் குடித்து 150-க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் பெரும்பாலானோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு சிலர், புதுச்சேரி ஜிப்மர், சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஷசாரயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை தற்போது 50-ஆக உயர்ந்துள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 28, சேலம் 15, விழுப்புரம் 4, பாண்டிச்சேரியில் 3 பேர் என மொத்தம் 50 பேர் பலியாகியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 88 பே சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுளளது.

இதனிடையே நேற்ற (ஜூன் 20) பாதிக்கப்பட்டவர்களை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்ற, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தார். இதனிடையே நேற்று கூடிய தமிழக சட்டசபையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவத்துவிட்டு, அதன்பிறகு சட்டபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதனயடுத்து இன்று காலை 10 மணிக்கு மீண்டும் தமிழக சட்டசபை கூடியது. கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்கட்சியினரான அதிமுக கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து சட்டசபையில் விவாதம் தொடங்கிய நிலையில், கள்ளச்சாரய மரணங்கள் குறித்து பேசுவதற்காக. அதிமுக எம்.எல்.ஏக்கள் விவாதம் நடந்த கோரி சபாநாயகரிடம் கோரிக்கை விடுததனர். காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை கேள்வி நேரம். அதை முடித்தவிட்டு விவாதம் நடந்தலாம் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

இதை ஏற்றுக்கொள்ளாத அதிமுக பாமக மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலவர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அதிமுகவினர் பாதகைகளுடன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர். இதில் எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி உதயகுமாரை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு வந்து வெளியில் விட்டனர்.

விவாதம் நடந்த முடியாது என்று கூறவில்லை. கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதம் நடத்தலாம் என்ற சொன்னேன். அதன்பிறகும் அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இன்று ஒருநாள் மட்டும் அவையில் பங்கேற்க அனுமதி இல்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட அதிமுகவினர் வெளியில் செய்தியாளர்களை சந்திததனர்.

அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விவாதம் நடந்த அனுமதிக்கவில்லை. சட்டப்பேரவை தலைவர் நடுநிலையுடன் இல்லை. அனுமதி கேட்டு குரல் கொடுத்த எங்களை வெளியேற்றிவிட்டார்கள். மக்கள் பிரச்னை பற்றி பேச விடாமல் எங்களை ஒடுக்க நினைப்பது கண்டனத்துக்குரியது என்று கூறினார்.

மேலும், திறமையற்ற அரசாங்கத்தால், கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்துள்ளனர். மக்கள் நடமாடும் மையப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வந்துள்ளது. கள்ளச்சாராய மரணத்தை ஆட்சியர் மறைக்க முயற்சி செய்தார். இந்த மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Edappadi Palanisamy Kallakurichi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment