தமிழகத்தின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கவனம் ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மக்களில் பலரும் இ-சேவை மையம் மற்றும் தங்களுக்கு அருகில் உள்ள இணையதள சேவை மையத்தை தொடர்புகொண்டு தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.
அதே சமயம் தமிழக அரசு சார்பில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கு நடைமுறைக்காக சிறப்பு முகாம் அமைக்கப்படும என்று கூறப்பட்டுள்ள நிலையில், மின் இணைப்பு உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின்வாரிய அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு உட்கார இருக்கை, இடம் சாமியான பந்தல் போன்ற வசதிகளை செய்து தர வேண்டும் என மின்சார வாரியம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் பல இடங்களில் மக்கள் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர். இதனிடையே ஆதார் எண் இணைப்பு குறித்து காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், தெற்கு கோட்டம் உத்திரமேரூர் உபகோட்டத்திற்கு உட்பட்ட உத்திரமேரூர் ஊரகம் சார்பில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நகரம், களியாம்பூண்டி, நெல்வாய், மானாம்பதி ஆகிய பிரிவு அலுவலகத்திற்கு உட்பட் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்வதற்காக சிறப்பு முகம் வரும் டிசம்பர் 3-ந் தேதி உத்திரமேரூரில் நடைபெற உள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக உத்திரமேரூரில் உள்ள உதவி மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில், மின் இணைப்பில் உள்ள பெயரை மாற்றம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு கவனம் ஈர்த்துள்ள நிலையில், மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை கடைபிடிக்கப்படுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.