/indian-express-tamil/media/media_files/VFqRP7uzqA6EoVf0YNVn.jpg)
நில அளவையர் லஞ்சம் பெற்றதற்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர், புகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் முன்னாள் டிஎன்பிஎல் காகித மில் உதவி மேலாளர் ஆவார். அவரது மனைவி மற்றும் மகன் பெயரில் வாங்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்ததன் பேரில், வீட்டுமனை தனிப்பட்டா வழங்க, ஏற்பாடு செய்ய திருச்சி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் நில அளவையராக பணிபுரியும் அருணை அணுகியுள்ளார். அப்போது அவர், ரூ.24,000/-லஞ்சம் கேட்டு, பின்னர் ரூ.9,000/- ஆக குறைத்து கேட்டுள்ளார்.
லஞ்சம் தர மறுப்பு தெரிவித்து ராஜேந்திரன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின்போது நில அளவையர் அருண் லஞ்சப்பணம் ரூ.9,000/-ஐ ராஜேந்திரனிடமிருந்து கேட்டு பெற்று வைத்திருந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் அருண் மீது வழக்கு பதிவு செய்து லஞ்ச வழக்கில் கைது செய்தனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.