Advertisment

கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி டாக்டர் சுப்பையா சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை

Tamilnadu Update : பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்த நிதி திரிப்பாதி உட்பட 32 பேரில் 3 பேர் சிறார் என்பதால், அவர்கள் விடுவிக்கப்பட்டு மீதமுள்ள 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி டாக்டர் சுப்பையா சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை

Tamilnadu News Update : சென்னை கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், புற்றுநோய் துறையின் தலைவராக இருப்பவர் டாக்டர் சுப்பையா. பாஜக மாணவர் அமைப்பாக ஏவிபிவி-யின் தலைவராக இருந்த இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ம் தன் வீட்டின் அருகில் ஒரு பெண்மணியுடன் இவருக்கு தகாராறு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதில் அந்த பெண்மணியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவர் வீட்டின் முதன்பு சிறுநீர் கழிப்பது குப்பைகளை கொடுவது என வழக்கமான செய்து வந்துள்ளர். இந்த சம்பவம் குறித்து அந்த பெண்மனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவர் மீது துறைரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இவர், தனது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சையில் பள்ளி மாணவி ஒருவரின் மரணம் தற்போது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக தரப்பில் தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் பல்வேறு பகுதிகளில் போட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏவிபிவியை சேர்ந்த சுமார் 32 பேர் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுட்ட அனைவரையம் கைது செய்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்கள் அனைவருககும் பிப்ரவரி 28 வரை சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்த நிதி திரிப்பாதி உட்பட 32 பேரில் 3 பேர் சிறார் என்பதால், அவர்கள் விடுவிக்கப்பட்டு மீதமுள்ள 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

.இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்த நிதி திரிப்பாதியை டாக்டர் சுப்பையா சிறையில் சென்று சந்தித்துள்ளார். இந்த செயல்அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் செயலாக உள்ளதாலும், ஏற்கனவே அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாலும், அவரை பணயிடை நீக்கம் செய்வதாக மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Tamilnadu Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment