கொடநாடு வழக்கு : கேரளாவை சேர்ந்த சயான் விசாரணைக்கு ஆஜர்

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சயானிடம் அதிகாரிகள் விசாரணை

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சயானிடம் அதிகாரிகள் விசாரணை

author-image
WebDesk
New Update
Kodanad Case

கொடநாடு கொலை வழக்கு

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

நீலகிரி மாவட்டம் கொடநாடு பங்களாவில் கடந்த 2017"ம் ஆண்டு நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக இவ்விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் தொடர்ந்து அனுப்பிய நிலையில் இன்று காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் முன்பு சயான் ஆஜராக வருகை வருகை தந்தார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kodanad

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: