/tamil-ie/media/media_files/uploads/2021/04/CVS.jpg)
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அமைச்சர் சி.வி சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து வருகிறது. இதில் ஒருபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் பல மாநிலங்களில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் நிலையில், தற்போது தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே திமுகவில் பொதுச்செயலாளர் துரைமுருகன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது குடும்பதினரும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.