கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தைகள் அட்டகாசம் தொடர்ந்து வரும் நிலையில். தோட்டத்தில் இருந்த நாயை அடித்துக் கொன்றுள்ளது. மேலும் ஆடுகளையும் வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisment
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் புளியங்கண்டி மலை அடிவாரப் பகுதியில் ஒரக்காளியூர் தனியார் தோட்டத்தில் கடந்த சில மாதங்கள் முன்பு 13 ஆடுகளை சிறுத்தை அடித்துகொன்றது. தொடர்ந்து சில தினங்களில் புளியங்கண்டி ராசு கவுண்டர் என்பவரின் தோட்டத்திலிருந்து வளர்ப்பு நாயை அடித்து கொன்றது.
இவ்வாறு சிறுத்தையின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்து. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் வனப்பகுதியைவிட்டு வெளியே வந்த சிறுத்தை ராசு கவுண்டர் தோட்டத்திலிருந்த மற்றொரு வளர்ப்பு நாயை அடித்து கொன்றுள்ளது. மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் கால்நடைகளை பராமரிப்பது சிரமமாக உள்ளது.
இதனால் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.