Advertisment

மக்களின் பல கதைகளை கேட்க நேரம் ஒதுக்கும் டேபிள் அண்ட் ஸ்டூல் : சென்னை இளைஞர் குழு புதிய முயற்சி

தங்கள் கதைகளைச் சொல்ல விரும்பும் மக்கள் நிறைந்த உலகில் ஜினோ ஜே அம்பக்கட்டு , கே தாமோதரன், மற்றும் ராகுல் மகேஷ் ஆகியோர் தங்களை "கேட்பவர்கள்" என்று கூறி வருகின்றனர்

author-image
WebDesk
New Update
Listen

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், மூன்று பேர் கொண்ட குழு மற்றவர்களின் கதைகளைக் கேட்பதற்காக தங்கள் மேஜை மற்றும் ஸ்டூலை வைக்க இடங்களைத் தேடி வருவது வழக்கம்

ஆங்கிலத்தில் படிக்க...

Advertisment

தனது பேச்சை கேட்க ஆளில்லை என்று தனிமையில் இருக்கும் மக்களின் பேச்சை கேட்டபதற்காகவே சென்னையை சேர்ந்த 3 இளைஞர்கள் டேபிள் அண்ட் ஸ்டூல் என்ற நிறுனத்தை தொடங்கியுள்ளனர். தன்னைச் சுற்றியுள்ள மக்களுடனான தொடர்பைத் துண்டிக்கும் இந்த காலத்தில் தனிமையில் இருக்கும் மக்களின் உணர்வகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனமும் இந்த இளைஞர்களின் செயலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. 

தங்களை கேட்கும் குழு என்று சொல்லிக்கொள்ளும் அந்த இளைஞர்கள், மக்களை அழைக்கும் போது ஒரு மேஜை மற்றும் ஸ்டூல் வைத்து நிறைய ஆதரவை வழங்குவதன் மூலம் இடைவெளியைக் குறைக்கிறது. அவர்களின் கதைகளைப் பகிர்ந்து ஆறுதல் பெறுகிறார்கள். அதே சமயம் அவர்களுக்க சிற்றுண்டியாக முறுக்கு வழங்கப்படுகிறது.

என்ஜிஓ ஊழியர் ஜினோ ஜே அம்பக்காடு, 24, சாப்ட்வேர் டெவலப்பர் கே.தாமோதரன், 25, மற்றும் பிகாம் இரண்டாமாண்டு மாணவர் ராகுல் மகேஷ், 20, ஆகியோர், இந்த ஆண்டு ஏப்ரலில் 'டேபிள் அண்ட் ஸ்டூல்' நிறுவனத்தை, தொடங்கியுள்ளனர். இந்த மூவரும் தங்களை "கேட்பவர்கள்" என்று கூறிக்கொள்கிறார்கள். அவர்களின் இன்ஸ்டாகிராம் பயோவில், தங்கள் கதைகளைச் சொல்ல விரும்பும் மக்கள் நிறைந்த உலகில், "நாங்கள் கேட்க இங்கே இருக்கிறோம்" என்று அறிவித்துள்ளனர்.

Listen

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அந்நியர்களின் கதைகளைக் கேட்க இந்த மூன்று பேர் தங்கள் மேசை மற்றும் ஸ்டூலுடன் பொது இடங்களில் ஐக்கியமாகிவிடுகின்றன. தெருக்களில் தொடங்கி கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் வரை, வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள், ஏனெனில் அவர்களின் இருப்பு கூட்டத்தை அதிகரிக்க மட்டுமே உதவும் அதனால் மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் வெவ்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) தாமோதரனும் ராகுலும் மீண்டும் மெரினா கடற்கரையில் நடைபாதைக்கு அருகில் ஸ்டூல் மற்றும் டேபிளை அமைத்தனர். "உங்கள் கதைகளைக் கேட்க நாங்கள் வந்துள்ளோம்" என்று ஒரு பேப்பரை நீட்டினார் ராகுல், நிச்சயமாக ஒவ்வொரு கதைக்கும் தலா ஒரு முறுக்கு என்ற சலுகையுடன்,  தொடங்கியபோது பலர் ஆர்வத்துடன் அவர்களை அணுகுவதற்கு வந்தனர். சிலர் இந்த முயற்சியைப் பாராட்டினாலும், மற்றவர்கள் தங்கள் பணத்தை எடுக்க இது ஒருவித தந்திரமாக இருக்கலாம் என்று முணுமுணுத்தனர். இதில் எனக்கு பிடித்த கதையை நான் சொல்லலாமா?”, “நான் கதை சொல்லாவிட்டாலும் முருகு இலவசமாக வழங்குவார்களா?”  கேள்விகள் பலவும் இருந்தது.

இது குறித்து தாமோதரன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், டேபிள் அண்ட் ஸ்டூல் என்பது ஜினோ மற்றும் ராகுல் ஆகியோரால் தொடங்கப்பட்ட ஒரு சின்ன பிராஜெக்ட், நான் ஒரு வாரம் கழித்து சேர்ந்தேன். நகரின் வெவ்வேறு இடங்களில் டேபிள் ஸ்டூல் அமைத்து, அங்கு அமர்ந்து மக்களின் கதைகளைக் கேட்கிறோம். ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஆறு முதல் ஏழு பேர் வந்து, அவர்கள் பேச விரும்பும் விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹேப்பி ஸ்ட்ரீட்ஸில் இதைச் செய்யத் தொடங்கினோம் (ஒரு செய்தித்தாளின் முன்முயற்சி, பல செயல்பாடுகளின் மூலம் பலருடன் பழகுவதற்கு மக்களை ஊக்குவித்தது). நிறைய பேர் அங்கு வந்து தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர், ”என்று கூறினார்.

Listen

தொடர்ந்து பேசிய ராகுல், நள்ளிரவில் ஜினோவிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புதான் இந்தத் திட்டத்தைக் கருத்திற்கொள்ளத் தூண்டியது. "ஜினோவுக்கு அவரது நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது, அவர் இப்போதெல்லாம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன, ஆனால் மற்றவர்களைக் கேட்க யாருக்கும் நேரம் இல்லை என்று கூறியுள்ளார். அவர் கூறியதை கேட்ட இவருக்கு ஏதாவது செய்ய தூண்டியது. நான் என் தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தேன், நள்ளிரவில், ஜினோவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, அடுத்த நாள் நான் கிடைக்கிறேனா, நாங்கள் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸைக் காட்ட முடியுமா என்று கேட்டேன். அது அங்குதான் தொடங்கியது,” என்று விரிவாகப் பேசினார்.

மேலும் அண்ணாசாலையில் தங்கள் முதல் முயற்சிக்கு இரண்டு அல்லது மூன்று பேர் வருவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தோம். ஆனால் எங்களுக்கு எல்லா வகையான கதைகளும் கிடைத்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேமராமேன் ஒருவர் எங்களிடம் வந்து தனது அனுபவத்தைப் பற்றியும், இது எம்எஸ் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று அவர் எப்படி நினைக்கிறார் என்றும் பேசினார். அன்று மட்டும் சுமார் 23 பேர் வந்ததால் நாங்கள் அந்த இடத்தை காலி செய்ய வேண்டியதாயிற்று. அதே சமயம் இதை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான உத்வேகத்தை எங்களுக்கு அளித்தது,” என்று தாமோதரன் கூறியுள்ளார்.

அடுத்த ஐந்து மாதங்களில், குழு பெரிய அளவிலான கதைகளைக் கேட்டது – ஒருவர் தனது நண்பர் தன்னை புறக்கணிக்கத் தொடங்கிய பிறகு எப்படி மிகவும் மனச்சோர்வடைந்தார் என்பது பற்றியும்,  சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த ஒரு குடும்பம், அந்த நேரத்தில் பணமில்லாமல் இருந்தது,அதன்பிறகு பொருளாதார ரீதியாக நல்ல நிலையை அடைந்தது பற்றியும்; ஒரு நபர் கல்லூரியில் படிக்கும்போது ஒரு சிறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டதும், அதன்பிறகு விடுதலையாகி தான் புதிய மனிதனாக மாற முயற்சித்து வருவதும் என பல கதைகள் கிடைத்தது.  

Listen

"இந்தக் கதைகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, மேலும் நம்மைச் சுற்றி பல கதைகள் எப்படி மறைந்துள்ளன, நாம் எப்படி ஒருவருக்கொருவர் வித்தியாசமாக இருக்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கிறது," என்று தாமோதரன் கூறுகிறார், அதே நேரத்தில் தனது நிலைமைக்கு வந்தது எப்படி காரணம் என்று விளக்கிய ஒற்றைத் தாயின் கதையை விவரித்த ராகுல், அந்த தாய் ஒரு கடினமாக முடிவை எடுத்தாதால் இறுதியில் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார், அதேபோல் "மக்கள் முற்றிலும் அந்நியரை எப்படி நம்புகிறார்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி பேசுகிறார்கள் என்பது உண்மையில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது" என்று ராகுல் மேலும் கூறுகிறார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் தூக்கம் மற்றும் ஓய்வெடுப்பது ஏற்கனவே சோர்வாக இருக்கும் ஆனால் "இதைச் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான் வெவ்வேறு நபர்களுடன் பேசுவேன். இது ஒரு நல்ல அனுபவமாக இருந்து, வெவ்வேறு இடங்களைத் தேடுவது, மேஜை மற்றும் ஸ்டூலை வைப்பது, மக்கள் எங்களை அணுகி தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்வதற்காகக் காத்திருப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது,” என்று தாமோதரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் முறுக்கு கொடுப்பது ஏன் என்பது குறித்து, தாமோதரன் கூறுகையில், அரிசி மாவு மற்றும் உளுத்தம் பருப்பால் செய்யப்பட்ட மொறுமொறுப்பான சிற்றுண்டி ஒரு "மோதல் இல்லாத" தேர்வு. ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் இருக்கும் ஆனால் யாருக்கும் முறுக்கு பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன். இது மலிவானது மற்றும் வெளியில் செல்பவர்கள் முறுக்கு வைத்திருப்பதை பொருட்படுத்துவதில்லை என்று கூறியுள்ளார்.. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் பதில் சூடாக இருப்பதாகவும், மக்கள் தங்கள் முன்முயற்சியை வரவேற்று, அவர்களை அணுகி, தங்கள் கதைகளை சொல்ல இடங்களை வழங்குவதாகவும் அவர் கூறுகிறார்.

ராகுலும் தாமோதரனும் பேசிக்கொண்டிருக்கும்போதே, கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக அவர்களைச் சுற்றிக் கூடி, அவர்களின் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தனர். ஒருவர் உறவுச் சண்டைகளைப் பற்றிப் பேசத் தொடங்கும் போது, இன்னொருவர் இரண்டு நாட்களுக்கு ஒரு குழுவாகச் சென்று ஒவ்வொருவருக்கும் ரூ. 2,000 பட்ஜெட்டில் ஒரு இடத்தைப் பற்றிக் கேட்டார். உடனே, ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநரும் அமர்ந்து சிறிது நேரம் பேசினார். அன்றைக்கு போதுமான கதைகளைக் கேட்ட பிறகு, ராகுலும் தாமோதரனும் அன்றைய அமர்வை முடித்தனர். அடுத்த வாரம் மெரினா கடற்கரைக்கு வந்து பல கதைகளைக் கேட்க திட்டமிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment