காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தற்கொலை : போலீஸ் விசாரணை

Tamilnadu News Update : ஜானிகராமன் மரணம் குறித்து தகவல் அறிந்த அதிமுக முக்கிய தலைவர்கள் திடீரென காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.

Tamilnadu News Update : ஜானிகராமன் மரணம் குறித்து தகவல் அறிந்த அதிமுக முக்கிய தலைவர்கள் திடீரென காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தற்கொலை : போலீஸ் விசாரணை

Tamilnadu News Update : தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19-ந் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில். வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் கலைகட்ட தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம், செய்து வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து வேட்பாளர்கள் பலரும் தங்களது பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதில் 51 மாநகராட்சி வார்டுகளை கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில், 36-வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டவர் ஜானகிராமன். திருமணம் ஆகாத இவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதில் இருந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவரை வெற்றிபெற வைக்க மாற்றுகட்சியை சேர்ந்த ஒருசிலர் மறைமுகமான இவருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஜானகிராமன் வெற்றி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் திடீரென மரணமடைந்தார். காலையில் அவரின் அறை கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதையை உடைத்து பார்த்தபோது அங்கு ஜானகிராமன் இறந்து கிடந்துள்ளார் 

Advertisment
Advertisements

இது தொடர்பாக விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்,  ஜானகிராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜானகிராமன் மரணத்திற்கு காரணம் என்ன தேர்தலில் நிற்க கூடாது என்று அவர் மிரட்டப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஜானிகராமன் மரணம் குறித்து தகவல் அறிந்த அதிமுக முக்கிய தலைவர்கள் திடீரென காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஜானகிராமன் மரணத்திற்கு விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: