/indian-express-tamil/media/media_files/2hdiogCm7hYaPaZf18WK.jpg)
தனியார் பிளாஸ்டிக் அரவை தொழிற்சாலையில் தீ விபத்து
திருவள்ளூர்: சோழவரம் அடுத்த செக்கஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் அரவை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து.
3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.
-
Jun 20, 2025 23:40 IST
தாய் கண்முன்னே சிறுமியை கவ்விச்சென்ற சிறுத்தை
கோவை, வால்பாறை அருகே 4 வயது சிறுமியை தாய் கண்முன்னே கவ்விச்சென்ற சிறுத்தை. சிறுமியை சிறுத்தை கவ்விச் செல்வதை கண்டதும் அலறித் துடித்த தாய். சம்பவ இடத்தில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை
-
Jun 20, 2025 20:39 IST
நீர்வரத்து உயர்வு - நீர்வீழ்ச்சிகளில் குளிக்க தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரே நாளில் 6,000 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக மூன்று மடங்காக உயர்வு. கர்நாடகா, கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், தமிழக எல்லையை வந்தடைந்தது
-
Jun 20, 2025 19:04 IST
வனப்பகுதியில் மரம் வெட்டிக் கடத்தல் - மர்மகும்பலுக்கு வனத்துறை வலை வீச்சு
மதுரை ஆண்டிபட்டி அருகே, மயிலாடும்பாறை மலைப் பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரண மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, மயிலாடும்பாறை அருகே உள்ள தாழையூத்து மலைப் பகுதியில் மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு கிடந்தன. சாலிமரம், உசிலை மரம், தோதகத்தி உள்ளிட்ட மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. முதல்கட்டமாக மர்மகும்பல் இந்த மரங்களை வெட்டி கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
வனத்துறையினர் அந்தப் பகுதியில் தீவிரமாக ஆய்வு செய்தபோது வனப்பகுதிக்குள் டிராக்டர் சென்று வரும் வகையில் பாதை அமைத்து மரங்களை வெட்டி கடத்திச் சென்றதாக தெரியவருகிறது. இதுதொடர்பாக கண்டமனூர் வனச்சரக அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மரங்களை வெட்டி கடத்திய மர்மகும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் சாலை உள்ளிட்ட அரசின் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் வனத்துறையினர் தடை விதித்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அடர் வனப்பகுதிக்குள் மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Jun 20, 2025 18:52 IST
களக்காடு சூழல் சுற்றுலா – நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி
திருநெல்வேலி மாவட்டம், நாளை முதல் களக்காடு தலையணை சூழல் சுற்றுலா செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
-
Jun 20, 2025 18:44 IST
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழை
இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழை
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. -
Jun 20, 2025 18:26 IST
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சிக் கொடிக் கம்பம் வழக்கு - தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட்
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதிக்கக் கோரி கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தாக்கல் செய்த மனு, இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்கை தள்ளுபடி செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
-
Jun 20, 2025 17:58 IST
முருகன் மாநாடு - இளையராஜாவிடம் அழைப்பிதழ் வழங்கிய இந்து முன்னணி நிர்வாகிகள்
மதுரையில், ஜூன் 22-ஆம் தேதி முருகன் மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பிதழை, இந்து முன்னணி நிர்வாகிகள் இன்று (ஜூன் 20) இளையராஜாவிடம் வழங்கினர்.
-
Jun 20, 2025 16:17 IST
சி.பி.எம் - இந்து முன்னணியினர் இடையே மோதல்
திண்டுக்கல் மாவட்டத்தின், அரசு மருத்துவமனை அருகே சி.பி.எம் கட்சியினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. சி.பி.எம் கூட்டத்தில், இந்து முன்னணி நிர்வாகி குறித்து பேசியதாகக் கூறி இந்த மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Jun 20, 2025 15:53 IST
கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர் சுப்புவின் சிலையை எம்.பி. தரணி வேந்தன் திறந்து வைத்தார்
ஆரணி அருகே முள்ளண்டிரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர் சுப்புவின் சிலையை எம்.பி. தரணி வேந்தன் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுப்புவின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர்
-
Jun 20, 2025 14:43 IST
பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் திடீரென தனியே கழன்று ஓடியதால் அதிர்ச்சி
மதுரை - குற்றாலம் இடையேயான அரசுப் பேருந்து, தென்காசி கடையநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் திடீரென தனியே கழன்று ஓடியதால் அதிர்ச்சி; பின்னிருக்கையில் அமர்ந்திருந்த 3 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
Jun 20, 2025 14:11 IST
நெய்வேலி என்எல்சி பாரதி விளையாட்டு அரங்கில் யோகா பயிற்சியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
நெய்வேலி என்எல்சி பாரதி விளையாட்டு அரங்கில் யோகா பயிற்சியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு என்எல்சி மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Jun 20, 2025 14:06 IST
பழங்குடியின கிராமத்திற்கு சாலை வசதி அமைக்கு பணி தீவிரம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் பகுதிக்கு உட்பட்ட அடர் வனத்தில் உள்ள பழங்குடியின கிராமமான சின்னாலகோம்பைக்கு அமைக்கப்படும் சாலை சுமார் 60 இருளர் பழங்குடி மக்கள் வசிக்கும் இப்பகுதிக்கு சாலை வசதி வேண்டி நீண்ட காலமாக அவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அரசு ரூ.4 கோடி ஒதுக்கியது. முதற்கட்டமாக சாலை வெட்டும் பணிகள் தற்போது நடந்துவருகின்றன.
-
Jun 20, 2025 13:37 IST
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் நிபந்தனை ரத்து - ஐகோர்ட் உத்தரவு
மதுரையில் இந்து அமைப்புகள் நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அனுமதி பாஸ் வாங்க வேண்டும் என்ற தனி நீதிபதி விதித்த நிபந்தனையை எதிர்த்து இந்து முன்னணி செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு, அந்த நிபந்தனையை ரத்து செய்தனர். மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் காப்பீடு, ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று ஆகியவற்றை காவல்துறையினரிடம் வழங்கி, அவர்கள் பதிவு செய்த பிறகு உள்ளே அனுமதிக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
Jun 20, 2025 13:19 IST
ஓகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை விதிப்பு!
ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 17,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், ஆற்றிலும், நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மக்களின் பாதுகாப்பைக் கருதியும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
Jun 20, 2025 13:12 IST
நீர்நிலையை ஆக்கிரமித்து மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி: ஐகோர்ட் முக்கிய உத்தரவு
புதுக்கோட்டை, மாத்தூரில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்ற கோரி வழக்கு தொடர்ப்பட்டதில், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டியை 4 வாரங்களில் இடித்து அகற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. "நீர்தேக்க தொட்டி கட்ட செய்த செலவை, அனுமதி வழங்கிய அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் வசூல் செய்ய வேண்டும்" உயர் நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. -
Jun 20, 2025 13:07 IST
கள்ளக்குறிச்சியில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு; 4 பேர் கைது
கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே தனியார் மருந்தகத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட மருந்தக உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தெரிந்துகொள்ள ரூ.1,500 வசூலித்துள்ளனர். பெண் சிசு என தெரிந்தால் கருக்கலைப்பு செய்ய ரூ.1 லட்சம் வரை பெற்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
-
Jun 20, 2025 12:51 IST
கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜித்தின் ஜாய் புதிய மனு - அரசு எதிர்ப்பு
கோடநாடு கொலை - கொள்ளை வழக்கில் குற்ற சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட அனுமதி கோரி, இந்த வழக்கில் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜித்தின் ஜாய் தரப்பில் உதகை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட அனுமதி கோரிய மனுவிற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 20, 2025 11:21 IST
தென்காசி அருகே கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் சக்கரம்
தென்காசி, கடையநல்லூர் அருகே அரசுப் பேருந்தின் பின்சக்கரம் கழன்று ஓடியதால் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தின் பின்பகுதியில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் 3 பேர் காயம் அடைந்தனர். பேருந்துக்குப் பின்னால் மற்ற வாகனங்கள் வராததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது
-
Jun 20, 2025 10:40 IST
பதிவேடுகள் கொள்முதலில் முறைகேடு; 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவேடுகள் கொள்முதலில் முறைகேடு புகாரில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவுசெய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது
-
Jun 20, 2025 10:11 IST
தனியார் பிளாஸ்டிக் அரவை தொழிற்சாலையில் தீ விபத்து
திருவள்ளூர் : சோழவரம் அடுத்த செக்கஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் அரவை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து.
3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை!
-
Jun 20, 2025 09:20 IST
திருப்பூர் மோசடி
திருப்பூர்: பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் எனக்கூறி பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த விபின்தாஸ்(35), முனாஸ்(38) ஆகிய 2 பேர் கைது.
பாதிக்கப்பட்ட தில்லைராஜன், டெலிகிராம் செயலிக்கு சென்று குறிப்பிட்ட வங்கிக்கணக்குக்கு பல தவணைகளில் பெரும் தொகையை செலுத்தியுள்ளார்.
-
Jun 20, 2025 09:19 IST
அந்தியோதயா ரயில் சேவை மாற்றம்- நெல்லை வரை மட்டும் இயக்கப்படும்
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகளால், தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் சேவை மாற்றம்.
ஜூன் 22 - ஜூலை 22 வரை அந்தியோதயா ரயில் நெல்லை வரை மட்டும் இயக்கப்படும், மறுமார்க்கமாக நெல்லையிலிருந்து புறப்படும்.
-
Jun 20, 2025 09:15 IST
குமரி கடலில் குளிக்கவும், இறங்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்.
குமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், இறங்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்.
குமரி கடல் பகுதியில் நிலவி வந்த கடல் சீற்றம் காரணமாக கடந்த 4 நாட்களாக கடலில் குளிக்கவோ இறங்கவோ கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.