மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள்: மேயர், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆய்வு

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பகுதியில் நடைபாதை மீது அமைக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட வேண்டும் என அதிகாரிகளை உத்தரவிட்டனர்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பகுதியில் நடைபாதை மீது அமைக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட வேண்டும் என அதிகாரிகளை உத்தரவிட்டனர்.

author-image
WebDesk
New Update
Madurai Update In tamil

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisment

ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கிய சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 'அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா' மே 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் என்பதால், விழா நடைபெறும் பகுதிகளில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, மதுரை மாநகராட்சி மேயர் வ.இந்திராணி, மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா, மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் வைகை ஆற்றுப் பகுதியிலும், மாட்டுத்தாவணி பேருந்து நிலையப் பகுதியிலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

வைகை வடகரையில் உள்ள ஆழ்வார்புரம் பகுதியில், குடிநீர் வசதி, கழிப்பறைகள் அமைத்தல், தூய்மைப் பணிகள், பாதுகாப்பு தடுப்புகள், மின் விளக்குகள், சாலைகள் சீரமைப்பு, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அம்சங்களை அவர்கள் பரிசீலனை செய்தனர். அதையடுத்து, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பகுதியில் நடைபாதை மீது அமைக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட வேண்டும் என அதிகாரிகளை உத்தரவிட்டனர்.

Advertisment
Advertisements

இச்செயல்பாட்டில் வருவாய்க் கோட்டாட்சியர் ர.த.சாலினி, மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாபு, துணை ஆணையர் ஜெய்னுலாபுதீன், நகர் நல அலுவலர் இந்திரா, செயற்பொறியாளர் மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: