/indian-express-tamil/media/media_files/2025/01/05/v8PGWyp4sJ2WsuBjHHnH.jpg)
குற்றாலத்தில் 6-வது நாளாக தடை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தின் குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தடை 6-வது நாளாக இன்றும் நீடிக்கப்பட்டுள்ளது.
சிறுவாணி அணை நீர்மட்டம்: சிறுவாணி அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு. நாற்பது அடியை நெருங்குகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 34.80 அடியாக இருந்த நிலையில், தற்போது 37.10 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கும் நிலையில், அணைக்கட்டு பகுதியில் மழை நீடித்தால் அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
May 30, 2025 19:17 IST
வைகாசி விசாகம்: தூத்துக்குடிக்கு ஜூன் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 14-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று அறிவித்துள்ளார்.
-
May 30, 2025 18:55 IST
முல்லைப்பெரியாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
முல்லைப்பெரியாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது
-
May 30, 2025 18:53 IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு தர்மஅடி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு உறவினர்கள் தர்மஅடி கொடுத்தனர். முதியவர் நடத்தி வந்த ஆவின் பாலகத்தையும் சிறுமியின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர்
-
May 30, 2025 17:27 IST
5 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட பைக்காரா படகு இல்லம்
ஐந்து நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்ட பைக்காரா படகு இல்லத்தில்,
வெண்மேக மூட்டத்திற்கு இடையே குளுகுளு காலநிலையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர் -
May 30, 2025 15:56 IST
5 தமிழகத்தில் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
May 30, 2025 15:16 IST
இறுதிக்கட்டத்தில் திமுக பொதுக்குழு ஏற்பாடுகள்
மதுரை மாவட்டம் உத்தங்குடியில் அண்ணா அறிவாலய தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள திமுக பொதுக்குழு மாநாட்டு அரங்கத்திற்கான முகப்பு அமைக்கப்பட்டுள்ளது.
-
May 30, 2025 14:18 IST
"விரக்தியின் உச்சத்தில் உள்ளோம்"
பாமக தொண்டர்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளோம், கட்சிக்குள் நெருக்கடியான சூழல் நிலவுகிறது. மன உளைச்சலால் ராஜினாமா செய்ய முடிவு செய்தேன், என்னை ராஜினாமா செய்ய விடாமல் ராமதாஸ் தடுத்து விட்டார் என பாமக எம்எல்ஏ அருள் கூறியுள்ளார்.
-
May 30, 2025 13:11 IST
2023ல் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை
வாணியம்பாடி: 2023ல் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சுகாதாரமற்ற பல் மருத்துவ உபகரணத்தை பயன்படுத்தி சிகிச்சை அளித்ததில் 8 பேருக்கு மூளையில் தொற்று ஏற்பட்டது. வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சி விசாரணை நடத்தி வருகிறார்.
-
May 30, 2025 12:57 IST
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி, தேனியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
-
May 30, 2025 12:45 IST
பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் பலி - மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் விசாரணை
வாணியம்பாடியில் 2023 ஆம் ஆண்டு பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சுகாதாரமற்ற பல் மருத்துவ உபகரணத்தை பயன்படுத்தி சிகிச்சை அளித்ததில் 8 பேருக்கு மூளையில் தொற்று ஏற்பட்டது. வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சி விசாரணை நடத்தி வருகிறார்.
-
May 30, 2025 11:46 IST
ராமதாஸ் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்த நிலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 காவலர்கள் உள்ள நிலையில் கூடுதலாக 5 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
May 30, 2025 10:59 IST
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
சென்னை மதுராந்தகம் அருகே விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிகுள்ளாகியுள்ளனர். சிமெண்ட் பைப் ஏற்றி வந்த மினி லாரி டயர் வெடித்து நிலைத்தடுமாறி சாலையின் குறுக்கே நின்றதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
May 30, 2025 10:58 IST
நெல்லை எம்.எஸ். பல்கலை ஒத்திவைத்த தேர்வு இன்று நடக்கிறது
நெல்லை எம்.எஸ். பல்கலை.ல் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் ஒத்திவைத்த தேர்வு இன்று நடக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு ஒத்திவைக்கப்பட்ட இன்டஸ்ட்ரியல் எனும் தேர்வு இன்று நடக்கிறது. வினாத்தாள் கசியப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.