Coimbatore, Madurai, Trichy News updates: மதுரையின் முதல் மேயர் முத்து சிலையை திறந்துவைத்த ஸ்டாலின்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stalin muthu

அணைகளின் நீர்மட்டம் குறித்த விபரம்: ஈரோடு பவானிசாகர் அணைக்கு நேற்றிரவு 6488 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று காலை 8155 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அணையின் நீர் மட்டமும் 80.86 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 16.14 டி.எம்.சி. ஆக உள்ளது.

Advertisment

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 2913 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 112.38 அடியாகவும், நீர் இருப்பு 81.837 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் சில தினங்களில் மேட்டூரை வந்தடையும் என்பதால் நீர் வரத்து இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • May 31, 2025 21:30 IST

    மதுரையின் முதல் மேயர் முத்துவின் சிலை திறப்பு

    ஆரப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள மதுரையின் முதல் மேயர் எஸ். முத்துவின் முழு உருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  பெருங்குடி முதல் கரிமேடு வரை 4 மணி நேரமாக நடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நிறைவு பெற்றது.



  • May 31, 2025 21:27 IST

    சிவகங்கை: பாறை சரிந்து 6 பேர் பலியான சம்பவம்-நடவடிக்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கனிமவளத்துறை, வருவாய் ஆய்வாளர், VAO ஆகியோர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • May 31, 2025 20:36 IST

    சேலத்தில் போதை மாத்திரைகள் விற்ற 6 பேர் கைது

    சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டர் ஜங்சன் அருகே சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சூரமங்கலம் தர்மன்நகரை சேர்ந்த கவுதம் (வயது 24), சந்தைபேட்டையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (23), பெரியார் நகரை சேர்ந்த அர்ச்சுனன் (27), பள்ளப்பட்டியை சேர்ந்த தனிஷ் (25), ஜான்சன்பேட்டையை சேர்ந்த தங்கபாண்டியன் (21), அய்யம்பெருமாள்பட்டியை சேர்ந்த பிரசாந்த் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.



  • May 31, 2025 19:40 IST

    பொள்ளாச்சி இளைஞர் கொலை வழக்கு: எஸ்.ஐ. கைது

    பொள்ளாச்சி இளைஞர் கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து 18 சவரன் நகை கையாடல் செய்த எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.1.50 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக மகாலிங்கபுரம் காவல்நிலைய எஸ்.ஐ. நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • May 31, 2025 19:37 IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தது. இதனால் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். 



  • May 31, 2025 19:36 IST

    பச்சிளம் குழந்தை விரல் துண்டிப்பு -செவிலியர் மீது வழக்கு

    வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 6 நாள் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் அலட்சியமாக இருந்த செவிலியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • May 31, 2025 19:19 IST

    தி.மு.க. பொதுக்கூட்டம்- முகக்கவசம் அணிய அறிவுரை

    மதுரையில் நாளை (ஜூன்1) நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து வர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தி.மு.க. கூட்டத்திற்கு வரும் 50 வயது கடந்த மூத்த நிர்வாகிகள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா குறித்து அச்சம் தேவையில்லை, முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றும், பாதுகாப்புக்காக முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



  • May 31, 2025 19:13 IST

    தாயை பிரிந்த குட்டியை சேர்த்துவைக்க வனத்துறை முயற்சி

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானி சாகர் நீர்த்தேக்கப் பகுதியில், கடந்த 27-ந்தேதி தாயிடம் இருந்து பிரிந்து தனியாகச் சுற்றி திரிந்த 9 மாத ஆண் யானை குட்டி ஒன்று வனத்துறையினரால் மீட்கப்பட்டது.  குட்டியை அதன் தாயுடன் மீண்டும் இணைக்க சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையில் தனிப்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, தாய் யானையைக் கண்டறியும் பணி 5-வது நாளாக தீவிரமாக நடந்து வருகிறது.



  • May 31, 2025 18:56 IST

    திருச்செந்தூர் ஜெல்லி மீன்களால் குழந்தைகள் காயம்

    திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள், கடலில் நீராடி கொண்டிருந்த பக்தர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது.

    3 குழந்தைகள் உள்பட 5 பேருக்கு காயமடைந்தனர்



  • May 31, 2025 18:32 IST

    மதுரையில் ஸ்டாலின் ரோடு ஷோ

    Vidoe credit: 



  • May 31, 2025 17:52 IST

    மதுரையில் ஸ்டாலின் ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

    மதுரையில் ரோட் ஷோவை தொடங்கினார் மு.க.ஸ்டாலின். வழிநெடுக திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.



  • May 31, 2025 16:52 IST

    10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    இன்று இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 31, 2025 16:16 IST

    திருச்சியில் இ-சிகரெட்டுகள் பறிமுதல்

    திருச்சி விமான நிலையத்தில், கோலாலம்பூரில் இருந்து வந்த பயணியிடமிருந்து சுமார் ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பயணியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



  • May 31, 2025 15:08 IST

    சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே  கன்னக்குடும்பன்பட்டியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான மாரீஸ்வரன் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில்  கடந்த 5 நாட்களாக மழையின் காரணமாக பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பட்டாசு உற்பத்தி பணிகள் மேற்கொள்வதற்காக தொழிலாளர்கள் வருகை புரிந்தனர். அப்போது  பட்டாசு தயாரிக்க பயன்படும் ரசாயன கலவை செய்யும் அறையில் திடீரென்  தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

    ரசாயன கலவையில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த ரசாயன மருந்து வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை  விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் அடுத்தடுத்த அறைகளில் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்.



  • May 31, 2025 15:07 IST

    சேலத்தில் 13 கவுன்சிலர்கள் மீது வழக்குப் பதிவு

    சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தரப்பு கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்ட விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரு தரப்பில் இருந்தும் புகாரளிக்கப்பட்ட நிலையில் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



  • May 31, 2025 15:02 IST

    திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகள் நீக்கம் 

    திண்டுக்கல் மாவட்ட பா.ம.க நிர்வாகிகளை கூண்டோடு மாற்றம் செய்து அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்து புதிய நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்



  • May 31, 2025 15:00 IST

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு - 750 காளைகள் பங்கேற்பு 

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கீழவேகுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதற்காக புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 750 காளைகள் அழைத்து வரப்பட்டன. 250 வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

    இதையடுத்து, மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு வீரர்கள் அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.



  • May 31, 2025 14:44 IST

    மதுரை வந்தடைந்த ஸ்டாலின் - தி.மு.க-வினர் உற்சாக வரவேற்பு 

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு வருகைதந்த  முதலமைச்சர் .மு.க.ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் தி.மு.க-வினர் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். 



  • May 31, 2025 14:37 IST

    திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்

    திருச்செந்தூரில் திடீரென கடல் 70 அடி உள்வாங்கி காணப்படுகிறது. கோயில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீ. நீளத்திற்கு உள்வாங்கியது. உள்வாங்கிய பகுதியில் பச்சை படிந்த பாறைகள் மீது அச்சமின்றி பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.  



  • May 31, 2025 13:48 IST

    கால்வாய் துணியால் மறைத்தது குறித்து ஆட்சியர் விளக்கம்

    மதுரை பந்தல்குடி கால்வாய் துணியால் மறைப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் கால்வாய் மறைக்கப்பட்ட விவகாரம் தற்போதுதான் எனக்கு தெரிய வந்துள்ளது என்று மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம் தெரிவித்துள்ளார். 



  • May 31, 2025 13:21 IST

    மதுரை சென்றடைந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

    திமுக பொதுக்குழுவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றடைந்தார் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற முதல்வருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு; 2 நாள் பயணமாக மதுரை சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை ரோடு ஷோவில் பங்கேற்கிறார்



  • May 31, 2025 12:35 IST

    ஈரோட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 300 கிலோ குட்கா பறிமுதல்!!

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்து 2 வட மாநில நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • May 31, 2025 12:00 IST

    முதல்வர் வருகை-தூர்வாரப்படாத கால்வாய் துணியால் மறைப்பு

    முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரும் நிலையில் மதுரை பந்தல்குடி சாலையில் சாக்கடை கழிவுகள் கலக்கும் பகுதி துணியால் மூடப்பட்டுள்ளது. தூர்வாரப்படாத நிலையில் சுமார் 2 கி.மீ க்கு சாக்கடை கால்வாயை அதிகாரிகள் துணியால் மூடியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ நடக்கும் வழியில் அவரது கண்ணில் படாமல் இருக்க நடவடிக்கை என மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.



  • May 31, 2025 11:32 IST

    கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி

    நெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்தும் கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 200 விநாடிகளில் வெற்றிகரமாக இலக்கை அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 



  • May 31, 2025 11:31 IST

    தி.மு.க. பொதுக்குழு கூட்டம் - பிரம்மாண்ட ஏற்பாடுகள்

    தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நாளை (ஜூன் 1) மதுரையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, உத்தங்குடியில் அமைந்துள்ள கலைஞர் திடலில் 90 ஏக்கரில் பரந்து விரிந்த பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மற்றும் வருவாய் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

    பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். பந்தலில் குளிர்சாதன வசதிகள், வண்ண விளக்குகள், பசுமை புல்வெளிகள், செயற்கை நீருற்றுகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நுழைவு வாயில், சென்னை அண்ணா அறிவாலயத்தை ஒத்த தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் கட்-அவுட்கள், தி.மு.க. அரசின் சாதனைகளை சுட்டி காட்டும் பதாகைகள் மற்றும் 100 அடி உயர கொடிக்கம்பம் ஆகியவை அரங்கின் அமைப்பை கூட்டுகின்றன.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். விமான நிலையத்தில் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ. மணிமாறன் உள்ளிட்டோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் தனியார் நட்சத்திர ஓட்டலுக்குச் சென்று ஓய்வெடுக்கிறார்.

    மாலை, அவ்விடமிருந்து கார் மூலம் அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு செல்லும் முதலமைச்சர், அங்கிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இந்த ரோடு ஷோ வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், டி.வி.எஸ்.நகர், பழங்காநத்தம், வ.உ.சி. பாலம், காளவாசல், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    ரோடு ஷோவின் ஒரு பகுதியாக ஜெய்ஹிந்த்புரத்தில் நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்க உள்ளார் முதல்வர். அப்போது, வீரகாளியம்மன் கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மேற்கூரையையும் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, மேயர் முத்து சிலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட வெண்கல சிலையை திறந்து வைக்க உள்ளார்.

    நாளைய பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் தலைமையில் பல முக்கிய அரசியல் அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் வரும் பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதே நேரத்தில் முதல்வர் பயணிக்கும் பகுதிகளில் ட்ரோன் பறக்க விட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.



  • May 31, 2025 10:38 IST

    நர்சிங் மாணவி தற்கொலை சம்பவம்

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் நேற்று நர்சிங் கல்லூரி மாணவர், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்த நிலையில், அவர் காதலித்த சக மாணவி வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை கல்லூரி மாணவி 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். பெங்களூரில் படித்துவந்த இருவரும் காதலித்து வந்த நிலையில், அப்பெண் கர்ப்பமானதைத் தொடர்ந்து திருமணம் செய்ய தனது வீட்டில் சம்மதிக்காததால் விரக்தியில் அம்மாணவர் நேற்று தற்கொலை செய்தார்.



  • May 31, 2025 10:09 IST

    9 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    நீலகிரி, தென்காசி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையல் தகவல் தெரிவித்துள்ளது. 



  • May 31, 2025 09:23 IST

    ரூ.639 கோடிக்கு வீடு வாங்கிய இளம் தொழிலதிபர்

    மும்பையில் இந்தியாவின் மிக அதிக விலை கொண்ட வீட்டை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் இளம் தொழிலதிபர் லீனா காந்தி திவாரி

     பிரபல மருந்து நிறுவனமான யுஎஸ்வி லிமிடெட்டின் தலைவரான லீனா காந்தி திவாரி, மும்பையின் வோர்லி பகுதியில் இரண்டு அதி-ஆடம்பர கடல் நோக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ.639 கோடிக்கு வாங்கியுள்ளார்



  • May 31, 2025 09:22 IST

    தைலாபுரம் தோட்டத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் ராமதாஸ்

    பா.ம.க.வில் அன்புமணி, ராமதாஸ் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், இருவரும் கட்சி நிர்வாகிகள் நியமனம், மற்றும் நீக்கம் குறித்து அடுக்கடுக்கான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் சென்னையில் தனது அலுவலகத்தில் அன்புமணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வரும் நிலையில், இன்று விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார்.



  • May 31, 2025 09:21 IST

    தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தனது குடும்பத்துடன் இராமேஸ்வரத்தில் சாமி தரிசனம்

    தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தனது குடும்பத்துடன் இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள புண்ணிய தீர்த்த கிணறுகளில் புனித நீராடி பின் தரிசனம் செய்தார்.



  • May 31, 2025 08:46 IST

    மதுரையில் முதல்வர் இன்று பிரமாண்ட ரோடு ஷோ

    மதுரையில் திமுக சார்பில் இன்று நடைபெறும் பிரமாண்ட ரோடு ஷோவில்
    பங்கேற்​கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். நாளை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் சிறப்பு ஏற்பாடு



  • May 31, 2025 08:40 IST

    குற்றாலம் அருவிகளில் 7வது நாளாக குளிக்கத் தடை

    தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் இன்று 7வது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையிலும், மலைப்பகுதிகளில் மழை தொடர்வதால் பாதுகாப்பு நடவடிக்கையாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது



Trichy Coimbatore Madurai Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: