மதுரை எம்பி சு.வெங்கடேசன் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பிய தமிழக பாஜக மாநில செயலாளர், எஸ்.ஜி சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கி மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில், மதுரையில் பெண்ணாடம் பேரூராட்சியோ, விஸ்வநாத் என்ற வார்டு உறுப்பினரோ இல்லை ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதுரை எம்.பி ஆன மீது எஸ்.ஜி. சூர்யா அவதூறு பரப்புவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கடந்த 16-ந் தேதி சென்னை தி நகரில் இருந்த எஸ்.ஜி சூர்யாவை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரின் கைதை கண்டித்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் மதுரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிடப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கில் ஜாமீன் கோரி எஸ்.ஜி சூர்யா மதுரை மாட்ட முதன்மை நீதுிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீது இன்று நடைபெற்ற விசாரணையில், எஸ்.ஜி. சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“