மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணத்திற்கு இடைக்கால தடை: ஐகோர்ட் தீர்ப்பு

மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் (NH 38) அமைந்துள்ள எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் (NH 38) அமைந்துள்ள எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Toll gate

மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் (NH 38) அமைந்துள்ள எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க மதுரை கிளை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Advertisment

மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் (NH 38) அமைந்துள்ள எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியபுரம் பகுதிகளில், தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் சுங்கக் கட்டணம்  வசூலிக்கப்படுவதாகக் கூறி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. சாலை நிலைமை மோசமாக இருப்பதால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இவ்வாறான சூழ்நிலையிலும் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது எனவும் மனுவில் கூறப்பட்டது.

தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்கம் மற்றும் லாரி புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் ஆகியவை, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு, கட்டண உயர்வு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமையை கண்டித்தன. மேலும், இந்த சாவடி தூத்துக்குடி மாநகராட்சிக்கு 2 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது என்பதால், அது விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது. (விதி: நகர எல்லைக்கு 15 கிமீ தொலைவில் இருக்க வேண்டும்)

நீதிபதிகள், மனுவில் உள்ள கருத்துக்களை பரிசீலித்த பின்னர், சாலைகளின் தரம் மற்றும் வசதிகள் இல்லாத நிலையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது எனக் கூறி, இரண்டு சுங்கச் சாவடிகளிலும் வசூலிக்க தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர் வாகைகுளம் சுங்கச் சாவடியில் சாலை நிலை மோசமாக இருந்ததால், முந்தைய வழக்கில் உயர்நீதிமன்றம் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவு பிறப்பித்தது.

Advertisment
Advertisements

சிவகங்கை மாவட்டத்தின் ஷென்பாகம்பேட்டை சுங்கச் சாவடியை, அருகிலேயே இன்னொரு சாவடி இருந்ததால் நீக்க உத்தரவு வழங்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலனில் மையமாகக் கொண்டு, உயர்நீதிமன்றம் எடுத்த இந்த தீர்ப்பு, சாலையின் தரம் மற்றும் கட்டமைப்பு மேம்படும்வரை தற்காலிகமாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: