Coimbatore, Madurai, Trichy News Highlights: முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய மேட்டூர் அணை

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mettur Dam

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு: நடுக்கடலில் நேற்றிரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து கைதுசெய்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

  • Jun 29, 2025 18:30 IST

    முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய மேட்டூர் அணை

    சேலம் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. அணை கட்டிய 91 ஆண்டு கால வரலாற்றில் 44வது முறையாக நிரம்பியுள்ளது. ஜூன் மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டியது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பாக 1957ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. 



  • Jun 29, 2025 17:39 IST

    டிஎன்பிஎல்: நெல்லைக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த திருப்பூர்

    27வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. திண்டுக்கல் மைதானத்தில் மாலை 3.15 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் சாத்விக், துஷார் ரேஹஜா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர் சாத்விக் 41 ரன்களும் , 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த சாய் கிஷோர் அதிரடியாக விளையாடினார் சிறப்பாக விளையாடி அவர் அரைசதமடித்து அசத்தினார் . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு திருப்பூர் அணி 182 ரன்கள் எடுத்தது. 183 தொடர்ந்து ரன்கள் இலக்குடன் நெல்லை அணி விளையாடுகிறது.



  • Advertisment
  • Jun 29, 2025 17:36 IST

    திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ச்சி

    திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் முதல் 2 பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. வார விடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு அருவிக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தாருடன் இன்று காலை முதலே அதிகளவில் திற்பரப்பு அருவிக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்துநின்று அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து உற்சாகமாக குளியலிட்டும். அருவியின் அழகை ரசித்து செல்கின்றனர்.



  • Jun 29, 2025 17:15 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு 8-ம் தேதி வரை காவல்

    ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு ஜூலை 8ம் தேதி வரை காவல் விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஒரு படகையும், 8 மீனவர்களையும் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் இலங்கை கடற்படை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 8ம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



  • Advertisment
    Advertisements
  • Jun 29, 2025 17:11 IST

    ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவில் தேரோட்டம்

    ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோயிலில் இன்று காலை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேரில் மாணிக்கவாசகர் எழுந்தருளினார். முக்கிய பிரமுகர்கள் தேர் சக்கரத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டபின் தேரோட்டம் தொடங்கியது. ஆவுடையார் கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரில் எழுந்தருளிய மாணிக்கவாசகர், நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



  • Jun 29, 2025 17:05 IST

    ஏலகிரி மலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழா

    ஏலகிரி மலையில் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோடை விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து மேற்கொண்டுள்ளது. இந்த விழாவை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய மற்றும் நவீன நடனங்கள், கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மேலும் சுற்றுலா குறித்த கண்காட்சி, உள்ளூர் கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இருப்பினும், 7 நாட்கள் நடத்தப்படும் கோடை விழா, மழை காரணமாக இன்று ஒருநாள் மட்டுமே நடத்தப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.



  • Jun 29, 2025 16:40 IST

    விடுமுறை: திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

    இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசன வழியில் சென்று மூலவரை தரிசிக்க, பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் 3 மணி நேரம் காத்திருந்தனர். 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.



  • Jun 29, 2025 16:16 IST

    இன்னும் சற்று நேரத்தில் நிரம்புகிறது மேட்டூர் அணை

    சேலம் மேட்டூர் அணை இன்னும் சற்று நேரத்தில் நிரம்புகிறது. அணையின் நீர்மட்டம் தற்போது 119.8 அடியாக ஆக உள்ளது. ஒரு சில மணி நேரங்களில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை கட்டி முடிக்கப்பட்ட 91 ஆண்டுகால வரலாற்றில் 44-வது முறையாக மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்ப உள்ளது. நேற்று காவிரி கரையோர மக்களுக்கும் மேட்டூர் அணையின் உபரிநீர் கால்வாய் பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணை நிரம்பியதும் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக நீர் வெளியேற்றப்படும் என்பதால் காவிரி பாயும் 11 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



  • Jun 29, 2025 15:47 IST

    திருச்செந்தூர் கோவில் யாகசாலை பூஜை ஏற்பாடுகள் தீவிரம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை 7-ந்தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. 15 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதால் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாக சாலை பூஜைகளுக்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கோவில் ராஜகோபுரம் அருகே 8 ஆயிரம் சதுர அடியில் 76 ஓம குண்டங்களுடன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த யாகசாலையில் பல்வேறு வர்ணம் பூசி, வண்ண பேப்பர் ஒட்டி, சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் முருகனின் அறுபடை வீடுகள் சுவாமிகள் சித்திரமாக வரையப்பட்டுள்ளன. மேலும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் யாகசாலை முழுவதும் தங்க வர்ணத்தில் மிகவும் தரமான அட்டை ஒட்டப்பட்டுள்ளது.



  • Jun 29, 2025 15:20 IST

    மேட்டூர் அணை உபரிநீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

    மேட்டூர் அணையில் உபரிநீர் திறக்கப்பட உள்ளதால் ஈரோடு காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் உபரி நீர் திறக்கப்பட உள்ளது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என கருங்கல்பாளையம் காவிரி கரையில் வருவாய் துறையினர் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Jun 29, 2025 15:15 IST

    விடுமுறை: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

    இன்று வார விடுமுறை நாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை தந்திருந்தனர். அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருப்பதால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



  • Jun 29, 2025 14:45 IST

    ஏலகிரி மலையில் கோடை விழா கொண்டாட்டம்

    ஏலகிரி மலையில் கோடை விழா கொண்டாட்டம் இன்று (ஜூன் 29) தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதையொட்டி அமைச்சர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



  • Jun 29, 2025 14:15 IST

    திருப்பூரில் புதுமணப்பெண் தற்கொலை

    திருப்பூரில் திருமணமாகி 78 நாட்களே ஆன பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் கொடுமைப்படுத்துவதால் தற்கொலை செய்து கொண்டதாக மரண வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில் ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



  • Jun 29, 2025 11:51 IST

    கீழடி - சங்க இலக்கியங்களின் வாழ்வியல் ஆதாரம் - தொல்லியல் துறை ஆணையர், உதயசந்திரன், IAS

    தமிழர்களின் வாழ்வியல் ஆதாரமாக இருப்பவை சங்க இலக்கியங்கள்; அப்படி சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்திற்குமான ஆதாரமாக கீழ்டி விளங்குகிறது. சங்கத் தமிழர்களின் வாழ்வியலை தற்போதைய அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் மறுகட்டமைப்பு செய்துள்ளது தமிழ்நாடு தொல்லியல் துறை  



  • Jun 29, 2025 11:25 IST

    வேலூரில் விஜயின் பூத் கமிட்டி கருத்தரங்கம்?

    ஜூலை 4 யில் தவெக செயற்குழு கூட்டத்தில் பூத் கமிட்டி கருத்தரங்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்கள் பரிசீலிக்கப்படும் நிலையி வேலூரில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடக்க வாய்ப்பு உள்ளது. விஜய் மாவட்ட சுற்றுப் பயணம் புறப்படும் முன்பாக பூத் கமிட்டி கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Jun 29, 2025 10:42 IST

    மழை நிலவரம்

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி மற்றும் கோவை மலை பகுதிகள் ஆகிய 6 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Jun 29, 2025 10:13 IST

    திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு- யாகசாலை பணி நிறைவு

    திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி யாகசாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. 40 நாட்களாக நடைபெற்ற பணி நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து தங்க நிறத்தில் ஜொலிக்கும் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.



  • Jun 29, 2025 10:05 IST

    மனைவியை கொன்று சடலத்தோடு உறங்கிய கணவர்

    கன்னியாகுமரி, கருங்கல் பகுதியில் மனைவியை கொன்ற கணவர் சடலத்தின் அருகே 12 மணி நேரம் உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்ததால் மரியாதை கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.



  • Jun 29, 2025 10:04 IST

    இளைஞர் உயிரிழந்த விவகாரம் - 6 காவலர்கள் சஸ்பெண்ட்

    விசாரணைக்காக திருப்புவனம் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம், 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நகை திருடியதாக கூறி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் உயிரிழந்த நிலையில்,  காவலர்கள் தாக்கியதால் அஜித் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் அங்கு பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம்



  • Jun 29, 2025 08:47 IST

    மின்சார பேருந்து எரிந்து விபத்து: 18 பயணிகள் காயம்

    திருச்சியில் இருந்து கோவை சென்ற பயணிகள் மின்சார பேருந்து கருமத்தம்பட்டி அருகே டிவைடரில் மோதி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதில் 18 பயணிகள் காயமடைந்தனர்.அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் அதிக பயணிகள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. காயம் அடைந்த பயணிகள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.



  • Jun 29, 2025 08:45 IST

    இரவு ரோந்து பணியில் இருந்த காவலர் உயிரிழப்பு

    கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அருகே  இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரவு ரோந்து பணியில் இருந்த தலைமைக் காவலர் மில்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்



  • Jun 29, 2025 08:44 IST

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 119.22 அடியாக உயர்வு

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 119.22 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் கொள்ளளவு 120 அடி என்ற நிலையில், அணை தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு நீர் வரத்து நேற்று 80,948 கன அடியாக இருந்த நிலையில், இன்று 68,000 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் கொள்ளளவான 93.4 டி.எம்.சியில் தற்போது நீர் இருப்பு 92.23 டி.எம்.சியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசத்திற்காக 26,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: