Coimbatore, Madurai, Trichy News: தி.மு.க கூட்டணியில் அதிக இடங்கள் கேட்போம் - திருமாவளவன்

Coimbatore, Madurai, Trichy News: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருமாவளவன்

மீண்டும் ஊருக்குள் புகுந்த காட்டுயானை: நீலகிரி அருகே 2 தினங்களுக்கு முன்பு விவசாயியை தாக்கி கொன்ற காட்டுயானை மீண்டும் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு  ஏற்பட்ட நிலையில், அதிநவீன தெர்மல் ட்ரோன் கேமரா மூலம் யானை விரட்டியடிக்கப்பட்டுள்ளது.

  • Jun 10, 2025 21:57 IST

    பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

    பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேப்பந்தட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வழக்கு ஒத்திவைப்பை அடுத்து, தேரை இழுத்தே தீருவோம் என போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



  • Jun 10, 2025 20:36 IST

    தி.மு.க கூட்டணியில் அதிக இடங்கள் கேட்போம்; அ.தி.மு.க கூட்டணி இன்னும் வடிவம் பெறவில்லை - திருமாவளவன்

    வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், தி.மு.க கூட்டணியில் தங்கள் கட்சி அதிகத் தொகுதிகளைக் கோரும் என்று தெரிவித்துள்ளார். அதே சமயம், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்து விமர்சித்துள்ளார்.

    அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "தி.மு.க கூட்டணியில் நாங்களும் அதிக தொகுதிகளைக் கோருவோம். கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்பது இயல்பான, வழக்கமான ஒன்று. பேச்சுவார்த்தையின் போது மனம் விட்டுப் பேசி அதன் அடிப்படையில் முடிவு எடுப்போம்" என்று குறிப்பிட்டார். இது திமுக தலைமையுடனான தொகுதிப் பங்கீடு குறித்த விசிகவின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கிறது.

    அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்து பேசிய திருமாவளவன், "அ.தி.மு.க - பாஜக கூட்டணி வெற்றி பெறும், ஆட்சி அமைக்கும் என்பது ஒருவிதமான பில்டப். இந்த நொடி வரை தி.மு.க கூட்டணிதான் ஒரு கூட்டணியாக வடிவம் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி இன்னும் ஒரு வடிவமே பெறவில்லை" என்று தெரிவித்தார். இதன் மூலம், அதிமுக கூட்டணியின் தற்போதைய நிலையை அவர் விமர்சித்துள்ளார்.



  • Advertisment
  • Jun 10, 2025 19:05 IST

    தி.மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்



  • Jun 10, 2025 18:38 IST

    யூடியூப் சேனல்களை தடை செய்ய கோரிய வழக்கு; காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    சாதி வெறியை தூண்டும் வகையில், வெறுப்பு பேச்சை பேசி வரும், யூடியூப் சேனல்களை தடை செய்ய கோரிய வழக்கில் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. செல்வக்குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநலன் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது



  • Advertisment
    Advertisements
  • Jun 10, 2025 18:10 IST

    மூதாட்டி கொலை வழக்கில் 2 பேர் கைது

    நாமக்கல் அருகே குளத்துப்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர்களது வீடு மற்றும் மில்லில் வேலை பார்த்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்



  • Jun 10, 2025 17:52 IST

    தென்காசி: 4 நீர்த்தேக்கங்களில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

    கார் பருவ சாகுபடிக்காக தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, அடவிநயினார், கருப்பாநதி, ராமநதி ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. 4 நீர்த்தேக்கங்களில் இருந்தும் 143 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.



  • Jun 10, 2025 17:22 IST

    கோயில் தேரோட்டம் தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து கூடாது : ஐகோர்ட்

     “பெரம்பலூர் – வேப்பந்தட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம் தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து கூடாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், ஸ்ரீவேத மாரியம்மன் கோயில் தேர், பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் செல்ல முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jun 10, 2025 17:20 IST

    அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

    திருவண்ணாமலையில் இன்று வைகாசி மாத பவுர்ணமி அண்ணாமலையார் கோயிலில் சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், மோர், கடலை மிட்டாய், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டன. 



  • Jun 10, 2025 16:58 IST

    ஆர்ப்பாட்டம் நடத்துவது அடிப்படை உரிமை - ஐகோர்ட் கிளை

    அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டபடி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது அடிப்படை உரிமை என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. முன்னதாக ஜாக்டோ- ஜியோ அறிவித்த வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போரட்டத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.



  • Jun 10, 2025 16:51 IST

    நாமக்கல் அருகே மூதாட்டி கொலை வழக்கில் 2 பேர் கைது

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதாட்டியை கொன்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், அஜித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாமியாத்தாள் வீட்டில் நகை, பணம் இருப்பதை அறிந்து பைக்கில் சென்று மூதாட்டியை கொன்றதாகவும், கொலையுண்ட நேரத்தில் சாமியாத்தாள் அலறியதால் தப்பி ஓடிவிட்டதாகவும் இருவரும் வாக்குமூலம் கொடுத்தனர்.



  • Jun 10, 2025 16:50 IST

    அசைவ உணவு - திருவண்ணாமலை கோவிலில் பரிகார பூஜை

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நேற்று தம்பதி கோயிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் அசைவ உணவான முட்டை குஸ்காவை மற்றும் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவில் வளாகத்தில் இன்று அதிகாலை பரிகார பூஜை செய்யப்பட்டது. அருணாசலேஸ்வரருக்கு அதிகாலை கலச பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தம்பதி அசைவு உணவு சாப்பிட்ட இடம் உள்ளிட்ட கோவில் வளாகங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது.



  • Jun 10, 2025 16:34 IST

    மேட்டூர் அணையில் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

    முதலமைச்சர் வருகையை ஒட்டி மேட்டூர் அணையை சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து வைக்கிறார்.



  • Jun 10, 2025 16:09 IST

    குப்பையில் கிடந்த பட்டாசை வெடித்த 4 குழந்தைகள் காயம்

    குளித்தலை அருகே குப்பையில் கிடந்த பட்டாசுகளை எடுத்து வெடித்தபோது 4 குழந்தைகள் காயம் அடைந்தனர். கவுண்டம்பட்டியில் வெடிக்காத பட்டாசுகளை கல்லால் குத்தியபோது வெடித்து விபத்து நேரிட்டது. காயமடைந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Jun 10, 2025 14:30 IST

    12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

     - வானிலை ஆய்வு மையம்



  • Jun 10, 2025 13:43 IST

    நாமக்கல் மூதாட்டி படுகொலை - சீமான் கண்டனம்

    நாமக்கல் மூதாட்டி படுகொலை சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி, "தி.மு.க ஆட்சிக்கு கொலைக்களத் தலைநகரமாகும் கொங்கு மண்டலமே சாட்சி; கொங்கு மாவட்ட தோட்ட வீடுகளில் முதியவர்கள் தொடர் படுகொலை அன்றாக நிகழ்வாகி விட்டது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 



  • Jun 10, 2025 12:07 IST

    நாமக்கல் அருகே வீட்டில் அழுகிய நிலையில் தம்பதி சடலம் மீட்பு!!

    நாமக்கல் மாவட்டம் ராசாம்பாளையத்தில் பொன்னுசாமி, அவரது மனைவி வாசுகி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். வீட்டில் அழுகிய நிலையில் இருந்த தம்பதியின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jun 10, 2025 11:48 IST

    தனுஷ்கோடி முதல் பாம்பன் வரை நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் :மீன்வளத்துறை

    தனுஷ்கோடியில் இருந்து பாம்பன் வரையிலான நாட்டுப் படகு மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. தனுஷ்கோடி முதல் பாம்பன் வரை நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என்றும் கடற்கரை முழுவதும் ரசாயன பிளாஸ்டிக் உதிரி பொருட்கள் பரவி உள்ளதால் மீன் பிடிக்க வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.



  • Jun 10, 2025 10:33 IST

    தமிழ்நாட்டில் மதியம் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

    தமிழ்நாட்டில் மதியம் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, தென்காசி, நெல்லையில் மதியம் 1 மணி வரை இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.



  • Jun 10, 2025 10:27 IST

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 5,482 கன அடியாக குறைந்தது!!

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 5,482 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 114.40 அடியாகவும், நீர் இருப்பு 84.820 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



  • Jun 10, 2025 09:39 IST

    தீக்கு இரையான பி.எம்.டபிள்யூ ( `BMW') கார்

    தஞ்சை, பட்டுக்கோட்டை நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட பி.எம்.டபிள்யூ (BMW) காரில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு படை வீரர்கள் போராடியும் கார் முழுவதும் பற்றி எரிந்துள்ளது.



  • Jun 10, 2025 09:37 IST

    மதுரை கூடல் நகர் அழகர் பெருமாள் கோயில் தேரோட்டம்

    மதுரை கூடல் நகர் அழகர் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு. வைகாசி விழாவை ஒட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பொதுமக்களுக்கு காட்சியளித்தார் சுந்தரராஜ பெருமாள்



  • Jun 10, 2025 09:35 IST

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 5,482 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 114.40 அடியாகவும், நீர் இருப்பு 84.820 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றம்



  • Jun 10, 2025 09:18 IST

    நாமக்கல் மூதாட்டி கொலை வழக்கு - 2 பேர் கைது

    நாமக்கல், பரமத்திவேலூர் அருகே தோட்டத்து வீட்டில் மூதாட்டி  கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுகைதான இருவரை மல்லசமுத்திரம்  காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Trichy Coimbatore Madurai Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: