/indian-express-tamil/media/media_files/2025/02/13/ZyWOBnQHbAnbNk6qQdxh.jpg)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பிரசித்தி பெற்ற தெப்ப திருவிழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தை சூழந்து, சுவாமி தரிசனத்திற்காக திரண்டிருந்தனர். இந்த விழாவில் சற்றே பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூட்டத்தின் வழியாக காரில் சென்றபோது, திடீரென ஒரு விஜய் ரசிகர் அவர் முன்பாக வந்து தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி கொடியை காட்டினார். வெறும் சில விநாடிகள் மட்டும் அல்ல, நீண்ட நேரம் அங்குமிங்கும் குதித்துக்கொண்டு கர்ஜித்தார். இந்த செயல் பக்தர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது. "சாமி தரிசனம் செய்ய வந்த இடத்திலும் அரசியல் செய்கிறார்களே!" என பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள், "விழாக்களில் அரசியல் செய்யும் பிரவேசம் தவிர்க்கப்பட வேண்டும். கூட்டத்தில் கொடியை காட்டினால் கட்சி வளர்ந்துவிடும் என சிலர் நினைக்கின்றனர், இது முற்றிலும் தவறான புரிதல்," என அவர்கள் கூறினர். இச்சம்பவம் தொடர்பாக விஜய் தலைமை பதிலளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இனி விஜய் ரசிகர்கள் அரசியல் நிகழ்வுகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தெளிவான அறிவுரை வழங்கப்படுமா என்பதும் பரிசீலிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.