/indian-express-tamil/media/media_files/2025/04/19/TQiB5CCdwBRGRa9I8PrB.jpg)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க) கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், திருச்சி எம்.பியும், அக்கட்சியின் முதன்மை பொதுச்செயலாளருமான துரை வைகோ தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்கத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அங்கம் வகித்த வைகோ, வாரிசு அரசியலை எதிர்த்து அக்கட்சியில் இருந்து வெளியேறி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இந்த கட்சியில் தலைவர் பதவியை விட, பொதுச்செயலாளர் பதவியே அதிக அதிகரமிக்கதாக வைத்து, அப்பதவியில் வைகோ இருந்து வருகிறார். ஒரு கட்டத்தில் தனது மகனை கட்சி பணிக்கு அழைத்து வந்த வைகோ, முதன்மை பொதுச்செயலாளர் பதவியை அவருக்கு கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்தா நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட துரை வைகோ, வெற்றி பெற்று எம்.பியாக ஆகிவிட்டார். இதனிடையே கட்சிக்குள் வந்த உடனே பதவி மற்றும் கூட்டணி கட்சியில் கொடுத்த ஒரு தொகுதியிலும் அவரே நின்று வெற்றி பெற்றுள்ளார். கட்சியில் அவர் திணிக்கப்பட்டதாக கட்சியில் உள்ள சீனியர்கள், வைகோவிடம் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு வைகோ செவி சாய்க்காததால், சில முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
தற்போது மதிமுக கட்சியில் இருக்கும் முக்கிய மூத்த தலைவர் மல்லை சத்யா. துரை வைகோ கட்சிக்கு வந்தததில் இருந்து, அவருக்கு கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார். இதனால் மல்லை சத்யா திமுக.வுக்கு செல்ல முயற்சி எடுத்த நிலையில், வைகோ, கொடுத்த நெருக்கடியின் காரணமாக தி.மு.க அவரை சேர்த்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே எம்.பி ஆனவுடன் கட்சியின் தனது இருப்பை வலுப்படுத்திய துரை வைகோ, கட்சியின் முக்கிய பதவிகளில் தனது ஆதரவாளர்களை நியமித்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் மல்லை சத்யாவை மதிமுக துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல மாவட்ட நிர்வாகங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை கண்டித்து ஏப்ரல் 20 (நாளை) நிர்வாக குழு கூட்டத்தை நடத்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியிருந்தார். மேலும் மல்லை சத்யாவுக்கு எதிரான இத்தகையா தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என்றும் எச்சரித்தார். மேலும் துரை வைகோ ஆதரவாளர்கள், கோரிக்கையை ஏற்க மறுத்த வைகோ, மல்லை சத்யாவை கட்சியில் நீக்கவும் மறுத்துள்ளார்.
இதனிடையே, மதிமுக முதன்மை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். நாளை கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், துரை வைகோவின் இந்த அறிவிப்பு, கட்சியில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது
இது குறித்து துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் 'முதன்மை செயலாளர் "என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் 'முதன்மை செயலாளர் "என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து…
— Durai Vaiko (@duraivaikooffl) April 19, 2025
ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால் அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். அதே நேரத்தில் மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிமுக முதன்மைச் செயலாளர்
— Durai Vaiko (@duraivaikooffl) April 19, 2025
பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
-------------------------------------------
அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ அவர்கள் திடீரென உடல்… pic.twitter.com/PVHVqChFVw
திருச்சி தொகுதி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்து தங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த மக்களுக்காக ஒரு எம்பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன். எப்போதும் போல இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அரணாகவும் சுக துக்கங்களில் பங்கேற்கும் தோழனாகவும் இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.