காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்!

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்!

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினர்களாக பொதுப்பணி முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவிரி ஒழுங்காற்று ஆணைய உறுப்பினராக  நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.மத்திய அரசு கடந்த மாதம் “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

மத்திய அரசு வகுத்துள்ள செயல் திட்டத்தின்படி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் செயல்படும். காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரில் இருக்கும். இந்த ஆணையத்தில் தலைவர் மற்றும் 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அணைகளில் நீர் இருப்பை கண்காணிப்பது, நீரை சேமிப்பது, நீரைத் திறந்து விடுவது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை மத்திய அரசு நேற்று அரசிதழில் வெளியிட்டது. அதில் “மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு சட்டம் 6(ஏ) 1956-ன்படி காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இதையடுத்து, காவிரி ஆணையத்தின் தலைவர் மற்றும் 9 உறுப்பினர்களை நியமனம் செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய நிரந்தர தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் அந்த பொறுப்பை வகிப்பார்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தமிழக பிரதிநியாக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தண்ணீர் திறப்பை உறுதி செய்யும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக திருச்சி மண்டல நீர்மேலாண்மை தலைமை பொறியாளர் ஆர். செந்தில்குமார் நியமனம் செய்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

publive-image

publive-image

Central Government

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: