காவிரி கரையில் கிடந்த ராக்கெட் லாஞ்சர்: காவல்துறை தீவிர விசாரணை ; திருச்சியில் பரபரப்பு!

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் வடக்கு பகுதியில், கரூர் சாலையில் தீர்த்தநாதர் சுவாமி கோயில் அருகே மினி ராக்கெட் லாஞ்சர் கைப்பற்றப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் வடக்கு பகுதியில், கரூர் சாலையில் தீர்த்தநாதர் சுவாமி கோயில் அருகே மினி ராக்கெட் லாஞ்சர் கைப்பற்றப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
today

திருச்சியில் தீபாவளி பட்டாசு சத்தம் கேட்கும் முன் நேற்று இரவு அந்தநல்லூரில் காவிரி படித்துறையில் கிடந்த, சிறிய அளவிலான ராக்கெட் லாஞ்சரை போலீஸார் கைப்பற்றியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் வடக்கு பகுதியில், கரூர் சாலையில் தீர்த்தநாதர் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு எதிரே உள்ள காவிரி ஆற்றின் படித்துறையில் சிறிய அளவிலான ராக்கெட் லாஞ்சர் கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தநல்லூரில் காவிரி படித்துறைக்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று, ராக்கெட் லாஞ்சரைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை சார்பில் கூறுகையில், "காவிரி ஆற்றின் படித்துறையில் கிடந்தது டம்மி ராக்கெட் லாஞ்சர்போல உள்ளது. இது காவல் துறையின் அறிவியல் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் தகவல்களைக் கொண்டுதான், கைப்பற்றப்பட்ட ராக்கெட் லாஞ்சர் குறித்த முழுவிவரம் தெரியவரும். இந்த ராக்கெட் லாஞ்சர் இங்கு எப்படி வந்தது என்பது குறித்து தற்போது விசாரித்து வருகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

க.சண்முகவடிவேல்

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

tamilnadu news Tiruchirapalli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: