தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் தமிழகம் முழுவதும் புதிய தாழ்தள பேருந்துகள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மண்டலம் மூலம் திருச்சி மாநகரின் துவாக்குடி, கே.கே.நகர், ஸ்ரீரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் 3 புதிய தாழ்தள சொகுசு பேருந்து சேவையினை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேருந்து, ஸ்ரீரங்கத்திலிருந்து விமான நிலையம் வரையிலும், கலைஞர் கருணாநிதி பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் இருந்து துவாக்குடி வரையிலும், மற்றொரு பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கே.கே நகர் வரை செயல்பட உள்ளது.
இந்நிகழ்வில் மண்டல 3ன் குழு தலைவர் மு. மதிவாணன் திருச்சி மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சதீஷ்குமார், திருச்சி மண்டல வணிகப்பிரிவு துணை மேலாளர் சுவாமிநாதன், துணை மேலாளர் தொழில் நுட்பம் புகழேந்தி ராஜ், திருச்சி கோட்ட மேலாளர் ராஜேந்திரன், டி.ஆர்.ஓ ராஜலட்சுமி, உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, பகுதி கழக செயலாளர் மோகன் மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி வட்டக் கழகச் செயலாளர் சங்கர் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, செய்தியாளர்கள் சிபிஎஸ்சி 9-வது வகுப்பிற்கு புத்தகத்தைப் பார்த்து பரீட்சை எழுதலாம் என்று கூறப்பட்டிருக்கிறதே என்ற கேள்விக்கு அறிவு வளருமா என்று பதில் அளித்துவிட்டு கடந்து சென்றார்.
க.சண்முகவடிவேல்