அமைச்சர் எ.வ வேலு சென்ற விமானம் மதுரையில் அவசரமாக தரையிறக்கம்

மோசமான வானிலையால் வானில் வட்டமடித்த விமானம்; மதுரையில் அவசரமாக தரையிறக்கம்; அமைச்சர் எ.வ வேலு உள்ளிட்ட பயணிகள் பத்திரமாக தரையிறங்கினர்

மோசமான வானிலையால் வானில் வட்டமடித்த விமானம்; மதுரையில் அவசரமாக தரையிறக்கம்; அமைச்சர் எ.வ வேலு உள்ளிட்ட பயணிகள் பத்திரமாக தரையிறங்கினர்

author-image
WebDesk
New Update
Madurai Airport to operate 24 hours  from oct 1 Tamil News

சென்னையில் இருந்து, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 77 பயணிகளுடன் தூத்துக்குடி புறப்பட்ட விமானம், அவசரமாக மதுரையில் தரையிறக்கப்பட்டது.

Advertisment

சென்னையில் இருந்து இன்று காலை தூத்துக்குடி புறப்பட்ட விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 77 பேர் பயணித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் காலையில் புறப்பட்டு சென்ற நிலையில், தூத்துக்குடி சென்றதும் அங்கு நிலவிய மோசமான வானிலையால் தரையிறக்க முடியவில்லை. இதனையடுத்து, சில நிமிடங்கள் வானிலேயே விமானம் வட்டமடித்தது.

இருப்பினும், வானிலை தொடர்ந்து மோசமாகவே இருந்ததால் உடனடியாக மதுரைக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர் மதுரை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பயணிகள் அனைவரும் மதுரை விமான நிலையத்தில் இறங்கினர். 

அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 77 பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், நலமுடன் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ev Velu Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: