Advertisment

கலைஞரை மோடி பாராட்டியதை அரசியலாக பார்க்க வேண்டியது இல்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்

மறைந்த கலைஞர் கருணாநிதியை புகழாமல் யாரும் இருக்க முடியாது, ஏனென்றால் கலைஞர் ஒரு சரித்திர சகாப்தம் – அமைச்சர் மனோ தங்கராஜ்

author-image
WebDesk
New Update
Mano Thangaraj Nagercoil

தலைவர் கலைஞரை புகழாதவர்கள் எவரும் இல்லை. பிரதமரின் பாராட்டை அந்த வழியில் பார்க்கிறேன் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisment

நாகர்கோவிலில் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி நடை பெறுகிறது. அதனை பால்வத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், ”மறைந்த கலைஞர் கருணாநிதியை புகழாமல் யாரும் இருக்க முடியாது, ஏனென்றால் கலைஞர் ஒரு சரித்திர சகாப்தம், அவர் தொடாத இடமில்லை, அவர் தொட்டு துலங்காத இடமும் இல்லை, எனவே பிரதமர் மோடி கலைஞரை பாராட்டியதை அரசியலாக பார்க்க வேண்டியதில்லை, நாட்டின் எத்தனையோ பிரதமர்கள் கலைஞரை பாராட்டி இருக்கிறார்கள், அவர்களை பிரதமர் நாற்காலியில் அமர வைத்தவர் கலைஞர். அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mano Thangaraj Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment