த.இ.தாகூர் குமரி மாவட்டம்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்,தி .மு.க என்னும் அரசியல் இயக்கத்தை தோற்றுவித்த பிதாமகன் அண்ணாதுரை (அண்ணா)வின் 115-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷ் தலைமையில், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில்,
தமிழக முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதியால், இன்று தமிழகத்தில் ஒரு கோடியே 6 லட்சம் குடும்ப தலைவிகள் பலம் பெற்றிருக்கிறார்கள். இதில் மனு செய்து பணம் கிடைக்காத குடும்ப தலைவிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தனியார் நிறுவன நெய் ஒரு கிலோ ரூ.950.00முதல்,ரூ.1100.00 க்கு விற்பனை செய்யும் நிலையில் ஆவின் நெய்யின் விலை ரூ.700.00மட்டுமே. அண்ணாமலை உண்மை நிலையை உணராது ஆவின் நெய் விலை உயர்வு என சொல்பவர். ஒன்றிய அரசு இந்த 9ஆண்டுகளில் தொடர்ந்து உயர்த்தி வரும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் இந்தியாவில் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை ஏற்றத்தை குறைக்க அண்ணாமலை முயற்சி எடுக்கவேண்டும். வாய்க்கு வந்தது போல் அறிக்கை விடக்கூடாது என அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“