Advertisment

38-வது முறையாக நீதிமன்ற காவல் நீடிப்பு : செந்தில் பாலாஜி மனுக்கள் மீது ஜூன் 14-ந் தேதி புதிய உத்தரவு

சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
 Senthil balaji case Enforcement Directorate to not grant bail and urge to order speedy trial Madras High Court Tamil News

அமைச்சர் செந்தில் பாலாஜி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் ஜூன் 14-ந் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

Advertisment

தமிழகத்தில் மின்வாரித்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவ்வப்போது மனு தாக்கல் செய்து வருகிறார். ஆனாலும் அவருக்கு ஜாமீன் வழங்காத நீதிமன்றம், அவரது நீதிமன்ற காவலை நீடித்து வருகிறது.

இதனிடையே தன்மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீதன உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வரும் ஜூன் 14-ந் தேதி வழங்க உள்ளது. இந்த மனுக்களில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமலாக்கத்துறையால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் ஒரு சில ஆவணங்கள் திருத்தபட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

கடந்த 2012 முதல் 2022- வரை சிட்டி யூனியன் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த காலக்கட்டங்களில், அந்த வங்களில் இருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் விபரங்களை வழங்க வேண்டும் என்றும், 2016 முதல் 2022 வரையான காலக்கட்டத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் டெபாசிட் செய்தவர்களின் பான்கார்டு விபரங்களை தெரிவிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அமலாக்கத்துறை தரப்பில், குற்றவியல் நடைமுறை 91-ன் கீழ் ஆவணங்களை வழங்க கோரி மனு தாக்கல் செய்ய முடியாது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. மேகலா வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட முழு தொகையையும் செந்தில் பாலாஜி மற்றும் அவரது அவரது மனைவி இருவரும் செலவு செய்துவிட்டு தற்போது தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர். இரு தரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி மனுக்கள் மீது வரும் ஜூன் 14-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

காணொலி காட்சியின் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜியின் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காலை 38-வது முறையாக நீடித்து உத்தவிட்டுள்ளார். இதன் மூலம் அவரது காவல் ஜூன் 14-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

V Senthil Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment