/tamil-ie/media/media_files/uploads/2022/05/Publishing.jpg)
நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் என்று எனக்கு தெரியாது என் வாழ்நாளையும் சேர்ந்து நீங்கள் வாழ வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சடடசபை கூட்டத்தொடரில் இன்று உரையாற்றிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,
ஆட்சி போகும் வரும், ஆனால் திராவிட இயக்கம் இருக்க வேண்டும். திராவிட இயக்க பற்றுடன் இருப்பவன் நான். திராவிட இயக்கத்தை காப்பற்றும் ஒரு ஆண் மகனாக நீங்கள் (முதல்வர் ஸ்டாலின்) பிறந்திருப்பதில். எனக்கு மகிழ்ச்சி. நான் எவ்வள்வு ஆண்டுகள் இருப்பேன் என்று தெரியவில்லை என் வாழ்க்கையையும் சேர்த்து நீர் வாழ வேண்டும் என்று உருக்கமாக பேசியுள்ளார்
மேலும், அப்பாவையே தோற்றடித்த மகனாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தனி ஒருவராக அவர் சிந்தித்து பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். திட்டங்களை தீட்டுவதிலும், அவற்றை செயல்படுத்துவதிலும், முதல்வருக்கு திருப்தி ஏற்படுவதில்லை. தண்ணீர் அதிகமான வந்தால் ஏரி குளங்கள் நிரம்பிவிடும். ஆனால் கடல் எப்போதும் நிரம்பாது வரும் நீரை ஏற்றுக்கொள்ளும்.
கடல்போல் திட்டங்களை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஓடாத தேரையே ஓட வைத்தவர் கலைஞர். செயல்படாத கவர்னரையே செயல்பட வைத்தவர் முதல்வர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.