விரைவில் தொடங்கவுள்ள சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையின் ஆழ்வார்புரம் பகுதியில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு, எ.வ.வேலு, மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. புனிதமான மீனாட்சி திருக்கல்யாணம் மே 8 ஆம் தேதி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் மே 12 ஆம் தேதி நடைபெறுகிறது.
திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து கட்டுப்பாடுகள், பொதுமக்களின் வசதிகள் ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தேவையான உத்தரவுகளை அமைச்சர்கள் வழங்கினர்.