/tamil-ie/media/media_files/uploads/2018/12/a211.jpg)
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று பகல் 12 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். மேகதாது விவகாரம், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு அனுமதி குறித்து முக்கிய ஆலோசனை இந்த கூட்டத்தில் மேற்கொள்ளபட்டது.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்தக் கூட்டத்தில், பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன. முக்கியமாக, தமிழகத்தில் 16 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொத்தம் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனங்கள் தொடங்கப்படும் என்பதும் இதன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோல, மேகதாது அணை தொடர்பாகவும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us