Advertisment

4 கோடி பறிமுதல் வழக்கு: நயினார் நாகேந்திரன் மகனிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை

4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் மகன் பாலாஜி சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Nainar Nagendran Son

நயினார் நாகேந்திரன் மகன்

மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையம் அருகே ரூ4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனை தொடர்ந்து அவரது மகனும், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆழராகியுள்ளார்.

Advertisment

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சிக்ள தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர், பல இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டபோது, அதில் கணக்கில் வராத ரூ4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் தற்போதைய எம்.எல்.ஏவும், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், பணத்தை கொண்டு சென்றதாக கைது செய்யப்பட்ட நவீன், சதீஸ், ஸ்ரீவைகுண்டம், பெருமாள் ஆகிய 4 பேரும் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் என்று பணத்தை அவரது தேர்தல் செலவுக்காக எடுத்து சென்றதாகவும் தகவல் வெளியானது. 

இந்த குற்றச்சாட்டை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்த நிலையில், இது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து இந்த இந்த வழக்கு தொடர்பான கைது செய்யப்பட்ட நவீன், சதீஸ், ஸ்ரீவைகுண்டம், பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி உள்ளிட்டோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு வரவேண்டும் என்று சம்மன் அனுப்பினர். 

மேலும் நயினார் நாகேந்திரன், அவரின் உதவியாளர் மணிகண்டன், பா.ஜ.க. அமைப்பு செயலாளர் சேகவ விநாயகம், கோவர்த்தன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து பா.ஜ.க நிர்வாகியம், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் இன்று சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் 4 கோடி கைப்பற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், அவர் அளிக்கும் பதிலை எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ ஆதாரமாகவும் பதிவு செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

இதனிடையே இந்த 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான நயினார் நாகேந்திரனை தொடர்ந்து அவரது மகன், பாலாஜியும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். தந்தை நயினார் நாகேந்திரனை தொடர்ந்து, அவரது மகனும் விசாரணைக்கு ஆஜரானது இந்த 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nainar Nagendran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment