/tamil-ie/media/media_files/uploads/2022/05/CM-Udhai.jpg)
திமுக இளைஞரணி செயலாளர், எம்.எல்,ஏ., உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த முதல்வராக வருவதற்கு உதயநிதி ஸ்டாலின் தயாராக இருப்பதாக அமைச்ச கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடம் நிறைடைந்துள்ள நிலையில், தமிகத்தின் பல பகுதிகளில் திமுகவின் ஒருவருட சாதனை விளக்க கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக சாதனை விளக்க கூட்டத்தில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் கருணாநிதிக்கு பின் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதுபோல்,இப்போது அவருக்கு பின் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற தயாராக உள்ளார். வாரிசாக இருந்தாலும் இருவரும் பல்வேறு சிரமங்களை தாண்டி மேலே வந்தவர்கள்.
திமுகவை எதிர்த்து தற்போது சண்டை போட ஆள் இல்லை. முதலில் நீங்கள் அனைவரும் இணைந்து சண்டைக்கு வாருங்கள். என்று அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கேடு கெட்ட ஆட்சி நடைபெற்றது. அவர்கள் கஜானாவை சுரண்டிவிட்டனர்.
ஆனால் தற்போது நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது. நமது முதல்வர் நல்ல முதல்வர் ஒவ்வொருவர் குடும்பத்திலும் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். டெல்லி பயப்படாத தலைமை நமது தலைமை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.