/indian-express-tamil/media/media_files/2025/10/06/karuruja-2025-10-06-22-56-18.jpg)
கரூரில் கடந்த 27 ஆம் தேதி விஜய் பிரச்சார நிகழ்வில் நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் இரங்கலை தெரிவித்ததோடு நிதி உதவியையும் வழங்கினர். அந்த வகையில் இன்று கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களை மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் கரூரில் விஜய் நடத்திய பரப்புரையின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்த இடங்களை ஆய்வு செய்தார். அப்போது அவர்களிடம் , இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும், மேற்படி உதவிகள் தேவைபடும் எனில் தமிழக அரசு நிச்சயம் அதனை செய்து முடிக்கும் என்றும், நானும் உதவி செய்ய இருப்பதாகவும், இது போன்ற சூழலில் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் ஆறுதல் கூறினார்.
மேலும் உயிரிழந்த 41 பேரில், 8 பேரின் குடும்பத்தினருக்கு உதவி தொகையாக ரூ.1 லட்சத்தை வழங்கினார். மீதமுள்ள 33 குடும்பத்தினருக்கு நாளை (07.10.2025) கட்சியின் துணைத் தலைவர் தங்கவேலு, மண்டலச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், ரங்கநாதன் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் இணைந்து உதவித் தொகை வழங்கவுள்ளனர் என்றார்.
இன்றைய நிகழ்வில் கமல்ஹாசன் உடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் முன்னாள் ஐபிஎஸ் ஏஜி மௌரியா, தங்கவேலு, பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம் மற்றும் மாநில, மண்டல, மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.