Advertisment

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கோரி போராட்டம் : மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

2024 ல் நடைபெற உள்ள தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். சர்வாதிகாரத்தை வீழ்த்தப்பட வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MNMK Party

மனித நேய மக்கள் கட்சி

ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் ஜூலை 9 ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்த உள்ளதாக அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.  

Advertisment

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் 37 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும்  ஜூலை 9 ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். நீண்ட ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த அறிவிப்பை தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி பொது மன்னிப்பு வழங்க  வேண்டும்.

மேலும் நேற்று பட்னாவில் 16 கட்சிகள் ஒன்று சேர்ந்த ஒரு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலான, சிறப்பான ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். 2024 ல் நடைபெற உள்ள தேர்தல் ஜனநாயகத்திற்கும்,  சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். சர்வாதிகாரத்தை வீழ்த்தப்பட  வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர்  முக.ஸ்டாலின் தமிழகத்தில் எவ்வாறு மதச்சார்பற்ற அமைப்புகள் ஓரணியில் உள்ளனர் என்பதை எடுத்துச் சொல்லியிருப்பது,  இந்தியாவிற்கே முன் மாதிரியாக அமைத்திருக்கிறது.

இதே அடிப்படையை பின்பற்றலாம் என்ற தெளிவான கருத்தை கூறியுள்ளார். அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற உள்ளது. மதம் மற்றும் இன்னும் பிற காரணங்களால் நாட்டை பிளவுபடுத்த கூடிய பாஜகவிற்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது நல்ல முயற்சியாகும். கூட்டத்தில் ஆம் ஆத்மி எழுப்பிய பிரச்சனை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுவில் விவாதித்து  நல்ல முடிவை எடுப்போம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

தமிழக ஆளுநர் தமிழக மக்கள் நலனைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். சட்டமன்ற சட்ட முன்வடிவுகளை ஒப்புதல் வழங்காமல் வைக்கிறார். சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானமும் ஆளுநருக்கு அனுப்பப்படும், அவர் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும அனுமதி வழங்கி தான் ஆக வேண்டும் என இவ்வாறு  தெரிவித்தார்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment