/indian-express-tamil/media/media_files/cbg.jpg)
கட்டுமான துறையில் கட்டிடங்களை தாண்டி கட்டிட கலை எனும் தொழில் நுட்பம்முக்கிய பங்கு வகுக்கிறதாஎன்று, கட்டிட கலை நிபுணர்கள் மாணவ மாணவிகளுக்கு தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கு பெறும் கட்டிடக்கலை கண்காட்சி கட்டிடகலை மற்றும் பல படைப்புத் துறைகளின் தொடர்பான தொழில்நுட்ப நுணுக்கங்களை ஒரே கூரையின் கீழ் தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் நடைபெற உள்ளது. கட்டுமான துறையில் கட்டிடங்களை தாண்டி கட்டிட கலை எனும் தொழில் நுட்பம்முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் இந்த துறையில் உள்ள நவீன தொழில் நுட்பம் வேலை வாய்ப்புகள் இது சார்ந்த மேற்படிப்புகள் என கட்டிடகலை துறை சார்ந்த அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் - கோவை அவினாசி சாலை சிட்ரா அரங்கில் "அவனி ரீச் 24" எனும் கட்டிடகலை கண்காட்சி நடைபெற உள்ளது.
கோழிக்கோட்டில் உள்ள அவனி டிசைன் கல்லூரி சார்பாக நடைபெற உள்ள இந்த கண்காட்சி குறித்து கட்டிட கலை நிபுணர்கள் மற்றும் துறை தலைவர்கள் சாம் சார்லஸ் தேவானந்த்,காட்வின் இம்மானுவேல்,ஓபிலியா வினோதினி மற்றும் அன்சு ஜார்ஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர் அப்போது அவர்கள் கூறுகையில்,
டிசைன் ஆர்வலர்களுக்கான ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இந்த கண்காட்சி நடைபெறுவதாகவும் கலை,கட்டிடக்கலை மற்றும் பல படைப்புத் துறைகளின் நுணுக்கங்களை ஒரே கூரையின் கீழ் தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறினார். மேலும் அவனி ரீச்'24 இன் முக்கிய பகுதிகளாக, நிபுணர் பேச்சுக்கள், கேள்வி-பதில் அமர்வுகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியின் நோக்கம் மாணவர்கள் கலை,கட்டிடக்கலை மற்றும் பல ஆக்கப்பூர்வமான துறைகள் பற்றி அறிந்துகொள்ளச் செய்வதும்அவர்களிடையே ஒரு கல்வி ஆர்வத்தை உருவாக்குவதுமே ஆகும்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.