/indian-express-tamil/media/media_files/2025/10/09/maduraijh-2025-10-09-17-21-44.jpg)
சொத்துவரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன்வசந்த் நிபந்தனைகளுடன் ஜாமீன் பெற்றுள்ளார். மதுரை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொன்வசந்த் தனது மனுவில் கூறியது: “நான் நிரபராதி, எந்த குற்றத்தையும் செய்யவில்லை. முன்விரோத காரணத்தாலேயே எனது பெயர் இந்த வழக்கில் சேர்ந்துள்ளது. உடல்நிலை மோசமாக இருப்பதால் அவசர சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறேன். எனக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நீதி விசாரணையில், மனுதாரர் தரப்பில் “இந்த வழக்கில் மனுதாரரை தவறாகச் சிக்க வைக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைபாடு உள்ளதால் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு தருவார். வழக்கில் தொடர்புடைய பலர் ஜாமீனில் உள்ளனர். அவருக்கு மட்டும் ஜாமீன் வழங்காதது ஒப்பானது அல்ல” என வாதம் முன்வைத்தனர்.
அரசுத் தரப்பில் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது எனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிபதி, மனுதாரர் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு, மதுரை நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 4 வாரங்களுக்கு தினமும் நேரில் ஆஜராக கையெழுத்திட வேண்டிய நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.