Advertisment

லாரியை வழி மறித்து கொள்ளை : இ.சி.ஆர் சாலையில் அதிர்ச்சி : மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் 3 பேர் இரு சக்கர வாகனத்தில் லாரியை துரத்தி கொண்டு வந்தனர்.

author-image
WebDesk
New Update
lORRYB

புதுச்சேரி லாரி

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி;

Advertisment

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில், லாரி டிரைவரை வழிமறித்து பணம் பறித்த மர்ம கும்பல்- சிசிடிவி காட்சியை வெளியிட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அடுத்த கோட்டைமேடு பகுதியை சேந்தவர் செந்தில்குமரன் (45). இவர் ஒதியம்பேட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர், லாரியில் லோடு ஏற்றிவிட்டு, சென்னை நோக்கி புறப்பட்டார். அப்போது கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் 3 பேர் இரு சக்கர வாகனத்தில் லாரியை துரத்தி கொண்டு வந்தனர்.

பின்னர் கொக்கு பார்க் சந்திப்பு அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே செந்தில்குமரன் லாரியை நிறுத்தியுள்ளார். உடனே பைக்கில் வந்த 3 பேரும் பணம் தருமாறு மிரட்டியுள்ளனர். உடனே பயந்துபோன செந்தில்குமரன், கையில் வைத்திருந்த ரூ.3,500ஐ மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே கூறினால், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து செந்தில்குமரன் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து, லாரி டிரைவரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment